திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் சிறப்புகள்

🏀முற்காலப்புலவர்கள் திருக்குறளைப் பாராட்ட திருவள்ளுவமாலையாக நுல் எழுதி வெளிட்டனர். 🏀 “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளில் திருக்குறள் போல உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை  என்பார் ஆல்பர்ட் சுவைச்சர். 🏀வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு   – பாரதியார் 🏀வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி – பேரா. சுந்தரம்பிள்ளை 🏀  நிலைத்தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல் – உமாபதிசிவம், நெஞ்சுவிடுதூது, 🏀சார்ஸ், இ. கோவர். கால்டுவெல்,…

Read More
தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்

தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை, 01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் உதாரணம் : 1                       “மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்             வெண்குடையைத் தேய்த்து வெகுளியால் – விண்படர்ந்து             பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்             தேயும் தெளிவிசும்பி னின்று”…

Read More
மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி நூல் குறிப்புகள்

🏀பத்துப்பாட்டு நூல்களிலேயே பெரிய பாடலான 782 அடிகள் கொண்டது. 🏀பெருகுவள மதுரைக்காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் இந்நூல் வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் இயன்றது.   🏀 ‘கூடற்றமிழ்‘ என்ற பெயரும் “காஞ்சிப்பாட்டு” என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறும். 🏀இங்குக் காஞ்சித்திணை என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பொருளைச் சுட்டாது தொல்காப்பியத்தின் நிலையாமைப் பொருளைக் குறிப்பிடும். 🏀மதுரையை ஆட்சிபுரிந்து வந்த தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 🏀பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள்…

Read More
நெடுநல்வாடை

நெடுநல்வாடை குறிப்பு வரைக

🏀நெடுநல்வாடையின் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். 🏀நெடுநல்வாடை தலைவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளான். 🏀188 அடிகளில் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இந்நூல். 🏀 ஒரு அகப்பொருள் பாடலாகவே விளங்குகின்றது. 🏀 அரசனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவியின் துன்பம் நீங்குமாறு ‘பகைவரை வென்று வேந்தன் விரைவில் வருவானாக’ என்று கொற்றவையைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. 🏀 நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை ஆகும். 🏀 தலைவன் போர்மேல் செல்லுதற்குரிய…

Read More
மலைபடுகடாம்

மலைபடுகடாம் விளக்கம்|tnpsc time

🌻ஆற்றுப் படைகளுள் பெரியது.  இதன் அடிகள் 583 ஆசிரியப்பாவால் ஆனது. 🌻இந்நூலில் “மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப” என்ற தொடர் காணப்படுகிறது. 🌻இதன் பொருள், “மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற மதநீராகிய திசைகள் எல்லாம் ஒலிப்ப” என்பது. 🌻பொருட்தொடர் இதில் இருத்தலின், இந்நூலிற்கு இப்பெயரே சூட்டி வழங்கினர். 🌻இது யானைக்கு மலையை உவமையாகக் கூறியும் யானை பொழியும் மத நீரின் ஓசையை மலையில் தோன்றும் பல வகை ஓசைக்கு உவமை ஆக்கியும் மலைபடுகடாம் என்ற தொடரைக் கையாண்டமையால், இப்பாடல் மலைபடுகடாம்…

Read More
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்|tnpsctime

🌻அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 🌻அருவி – மலைமுகட்டிலிருந்து நீர் குத்திட்டு வீழ்வது 🌻ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு 🌻ஆறு – இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு 🌻இலஞ்சி –  பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் 🌻உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு 🌻ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 🌻ஊற்று – அடியிலிருந்து நீர் ஊறுவது 🌻ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். 🌻கட்டுக்கிணறு –…

Read More
பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும்  வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

Read More
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
Translate »