பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும்  வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

Read More
முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல். 🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக்  கொண்டது. 🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று…

Read More
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
tnpsctime-பொருநர் ஆற்றுப்படை

பொருநராற்றுப்படை சிறப்புகள்

🎯 இந்நூல் 248 அடிகளை உடையது.
 🎯பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள்
 🎯இவர்கள் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என வகைப்படுவர்.
 🎯பொருநர் என்பவர் –  வீரர் அல்லது மறவர் போல் வடிவம் பூணுவோர்.
 🎯இப்பாட்டில் பொருநர் என்பது போர்க்களம் பாடுவோரைக் குறிப்பதாகும்.
 🎯பரிசில் பெறக் கருகிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்ற ஒரு பொருநன் ஆற்றுப்படுத்துகின்றான்.
 🎯இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார்.
 🎯இதன் பாட்டுடைத் தலைவன்…

Read More
பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்

🎯இந்நூல் 500 அடிகளை உடையது.
 🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
 🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர்.
 🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது.
 🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும்.
 🎯காஞ்சி இவன் தலைநகர்.
 “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“
                   என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க…

Read More
திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை குறிப்புகள்

✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார்.
 அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு ✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர்.
 ✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும்.
 ✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது.
 ✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும்.
 ✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும்.
 ✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று…

Read More
பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்

🏀’பாட்டும் தொகையும்’ எனும் போது, பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும்.
 🏀 “மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்’ என்று தமிழ்விடுதூது இதனைப் புகழும்.
 🏀 பத்துப்பாட்டிலுள்ள பாடல்களைப்பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர்.
 🏀 பத்துப்பாட்டு என்பது நூறு அல்லது நூற்றின்மிக்க அடிகளால் ஆகிய பத்துத் தனித்தனி நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
 🏀 இஃது அகவற்பாக்களால் அமைந்த பத்துப்பாடல்களின் கோவையாகும்.
 நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
 ஏறிய அடியின் ஈரைம்பாட்டு
 தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே
 (பன்னிரு…

Read More
எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்|Tnpsc Time

        தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவற்றில் “எட்டுத்தொகை” எனப்படும் தொகுப்பு தனிச்சிறப்புடையது. சங்க காலத்து புலவர்களின் ஆழ்ந்த சிந்தனை, மனித வாழ்வியல், இயற்கை, காதல், வீரியம் ஆகியவற்றை நுணுக்கமாகப் பதிவு செய்த எட்டு முக்கிய நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை ஆகும்.
 எட்டுத்தொகையின் பொருள் மற்றும் அமைப்பு
                 “எட்டு + தொகை” என்ற சொற்களின் சேர்க்கையாக உருவானதே எட்டுத்தொகை. அதாவது எட்டு…

Read More
பரிபாடல்

பரிபாடல் குறிப்புகள்|Tnpsc Time

🔔இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும்
 🔔வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது.
 🔔பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் 🔔ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது.
 ‘பரிபாடலே தொகைநிலை வகையின்
 இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்
 பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப’
 என வரும் தொல்காப்பிய நூற்பா பரிபாடல்பற்றிக் கூறும்.
 🔔இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400…

Read More
புறநானூறு

புறநானூறு பாடல் குறிப்புகள்

🔔அகநானூறு போன்று புறப்பொருள் பற்றிய 400 அகவற் பாக்களால் ஆன நூல்  
 🔔பொருளாலும், அளவாலும் புறநானூறு என்று பெயர் பெற்றது
 🔔இது புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும்.
 🔔பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
 🔔இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், வாழ்த்துப்பாடல் பெயரும் அறியக் கூடவில்லை. (பாக்களில் வரையறை தெளிவாகத் தெரியவில்லை).
 🔔நான்கடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் உள்ளன. எனவே இதன் அடியினை நான்கடிச் சிற்றெல்லை 40…

Read More
Translate »