பொருநராற்றுப்படை சிறப்புகள்

tnpsctime-பொருநர் ஆற்றுப்படை

🎯 இந்நூல் 248 அடிகளை உடையது.


🎯பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள்


🎯இவர்கள் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என வகைப்படுவர்.


🎯பொருநர் என்பவர் –  வீரர் அல்லது மறவர் போல் வடிவம் பூணுவோர்.


🎯இப்பாட்டில் பொருநர் என்பது போர்க்களம் பாடுவோரைக் குறிப்பதாகும்.


🎯பரிசில் பெறக் கருகிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்ற ஒரு பொருநன் ஆற்றுப்படுத்துகின்றான்.


🎯இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார்.


🎯இதன் பாட்டுடைத் தலைவன் கரிகால்வளவன் ஆவான்.


🎯தம் கலைத்திறனைக் காட்டிய திருவிழா முடிந்ததும், வேற்றூர் நாடிப் பொருநர் செல்வதாக இப்பாடல் தொடங்குகிறது


🎯பொருநராற்றுப்படை வருணனைச் சிறப்பு மிக்க ஓர் இலக்கியம்


🎯யாழின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் உவமை கூறி வருணிக்கப்படுகின்றது.


🎯விறலியின் உறுப்பு நலன்களை முடிமுதல் அடிவரை வருணிக்கும் திறம் பாராட்டற்குரியது.


🎯உவமை கரிகால் பெருவளத்தான், பொருநனின் மழுங்கி அமுக்காடையை நீக்கிக் கொட்டைக் கரைய பட்டுடை கொடுத்ததையும், அவன் கொடுத்த ஊன் சோற்றுணவை எல்லையும் இரவும் ஊன்தின்று பற்கள் மழுங்கியமையையும் முடத்தாமக் கண்ணியார் மிக விரிவாக எடுத்துரைப்பதின் மூலம், அரசனின் விருந்தோம்பும் பண்பு மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது.

🎯கரிகாலனின் வீரம், கொடை, நாட்டு வளம், காவிரியின் சிறப்பு ஆகியவை போற்றப்பட்டுள்ளன.


🎯கரிகாலன் தாய் வயிற்றிருந்து தாயம் எய்தல்,


🎯கன்னிப்போரில் சேர பாண்டியரை கரிகாலன் வென்றமை


🎯கரிகாலன் வலிமையை, “வெண்ணித தாங்கிய வெருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படும்.


🎯பொன்னியின் புதுப்புனல் வரவு, விறலியர் பொன்னரி மாலையைப் பரிசாகப் பெறல். செல்வச் செருக்கு வறுமையின் வாட்டம் போன்றன விளக்கப் பெற்றுள்ளன.


“சாலிநெல்லின்சிறைகொள்வேலி

ஆயிரம்விளையுட்டாகக்

காவிரிபுரக்கும்நாடுகிழவோனே” (246 – 248)

எனச் சோழ நாட்டுவளம் சுட்டப்படுகிறது.


🎯மணமகளுக்கு யாழை உவமையாக்கல் அரவுரியன்ன அறுவை, கொட்டைக்கரையுடைப் பட்டுடை என நெசவின் அருமை கூறல் முதலியவை இப்பாடலில் குறிப்பிடத்தக்க சிறப்பின உடையதாகும்.

Leave a Reply

Translate »