பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்

🏀’பாட்டும் தொகையும்’ எனும் போது, பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும்.
 🏀 “மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்’ என்று தமிழ்விடுதூது இதனைப் புகழும்.
 🏀 பத்துப்பாட்டிலுள்ள பாடல்களைப்பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர்.
 🏀 பத்துப்பாட்டு என்பது நூறு அல்லது நூற்றின்மிக்க அடிகளால் ஆகிய பத்துத் தனித்தனி நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
 🏀 இஃது அகவற்பாக்களால் அமைந்த பத்துப்பாடல்களின் கோவையாகும்.
 நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
 ஏறிய அடியின் ஈரைம்பாட்டு
 தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே
 (பன்னிரு…

Read More
எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்|Tnpsc Time

        தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவற்றில் “எட்டுத்தொகை” எனப்படும் தொகுப்பு தனிச்சிறப்புடையது. சங்க காலத்து புலவர்களின் ஆழ்ந்த சிந்தனை, மனித வாழ்வியல், இயற்கை, காதல், வீரியம் ஆகியவற்றை நுணுக்கமாகப் பதிவு செய்த எட்டு முக்கிய நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை ஆகும்.
 எட்டுத்தொகையின் பொருள் மற்றும் அமைப்பு
                 “எட்டு + தொகை” என்ற சொற்களின் சேர்க்கையாக உருவானதே எட்டுத்தொகை. அதாவது எட்டு…

Read More
பரிபாடல்

பரிபாடல் குறிப்புகள்|Tnpsc Time

🔔இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும்
 🔔வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது.
 🔔பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் 🔔ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது.
 ‘பரிபாடலே தொகைநிலை வகையின்
 இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்
 பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப’
 என வரும் தொல்காப்பிய நூற்பா பரிபாடல்பற்றிக் கூறும்.
 🔔இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400…

Read More
புறநானூறு

புறநானூறு பாடல் குறிப்புகள்

🔔அகநானூறு போன்று புறப்பொருள் பற்றிய 400 அகவற் பாக்களால் ஆன நூல்  
 🔔பொருளாலும், அளவாலும் புறநானூறு என்று பெயர் பெற்றது
 🔔இது புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும்.
 🔔பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
 🔔இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், வாழ்த்துப்பாடல் பெயரும் அறியக் கூடவில்லை. (பாக்களில் வரையறை தெளிவாகத் தெரியவில்லை).
 🔔நான்கடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் உள்ளன. எனவே இதன் அடியினை நான்கடிச் சிற்றெல்லை 40…

Read More
பதிற்றுப்பத்து விளக்கம்

பதிற்றுப்பத்து விளக்கம்

🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல்.
 🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது.
 🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது..
 🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை.
 🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன.
 🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
 🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம்.
…

Read More
கலித்தொகை

கலித்தொகை நூல் குறிப்புகள்

🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை.
  🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.
 🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்.
 🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து
 ”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
 பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
 கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
 உரியதாகும் என்மனார் புலவர்”…

Read More
அகநானூறு

அகநானூறு சிறப்புகள்

🔔அகத்திணையை முழுமையான அளவில் பாடல்களைக் கொண்டமையால் ‘அகம்’ எனவும் அகப்பாட்டு எனவும் அழைப்பர்.
 🔔 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட 400 செய்யுட்களைக் கொண்டது.
 🔔ஐந்திணையும் தழுவி ‘அகம்’ எனும் பெயரமைந்து காணப்படுகின்றது.
 🔔அகம்பற்றிக் கூறும் 400 பாக்களைக் கொண்டதனால் ‘அகநானூறு’ என்பர்.
 🔔அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களுள் நீண்டு காணப்படுவதால் ‘நெடுந்தொகை’ என்றும் வழங்கப்படுகின்றது.
 🔔அகப்பாட்டு, பெருந்தொகை நானூறு என வேறுபெயர்களும் இதற்கு உண்டு.
 🔔இந்நூலின் பெரும்பான்மையான பாடல்களில் அகப்பொருளின் மூலக்…

Read More
மலர் 6 இதழ் 2 ஆகஸ்ட் 2026

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN:3048 – 5495)

அன்புடையீர் வணக்கம்,
 🌻 ஆய்வுக்கட்டுரைகள் (ஆகஸ்ட் – 2026) வரவேற்கப்படுகின்றன. 
 🌻இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN: 3048 – 5495) சார்பாக வருடத்திற்கு 3 இதழாக (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 🌻ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் முறைமையோடு இருத்தல் வேண்டும்.
 1.முறையான ஆய்வு விதிகளின்படி ஆய்வுக்கட்டுரை இருக்க வேண்டும்.
 2.ஒவ்வொரு கட்டுரைக்கும் Policy Form பூர்த்தி செய்து Scan Copy அனுப்ப வேண்டும்.
 3.பெயர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் வேண்டும்.
 4.ஒவ்வொரு…

Read More
ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு குறிப்பு வரைக

🔔திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும்.
 🔔இதில் மூன்றடி முதல் ஆறு அடிவரை அமைந்துள்ள பாடல்கள் உள்ளன.
 🔔இது குறும்பாடல் களைக் கொண்டிருப்பதால் அம்மை என்ற வனப்பிற்கு ஐடகுறுநூற்றை எடுத்துக் காட்டாகக் கொள்வர் ஆசிரியப் பாவாலாகியது.
 🔔கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
 🔔இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
 🔔அடி குறைந்தாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் அளவால் பெருகிக் காணப்படும் பாடல்களைக் கொண்டது.
’மருதம் ஓரம்போகி நெய்தல்அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய
பாலை…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
Translate »