குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
Translate »