TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள்– 2019

1.’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள்
(A) கம்பராமாயணம், திருக்குறள்
(B) திருக்குறள், திரிகடுகம்
(C) திருக்குறள். திருவள்ளுவமாலை
(D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
(A) பைங்கூழ் = பசுமை + கூழ்
(B) சிற்றோடை= சிறுமை + ஓடை
(C) சேதாம்பல் = சேது + ஆம்பல்
(D) மரவடி = மரம் + அடி
3. தமக்குரியர் – பிரித்து எழுதுக
(A) தமக்கு + உரியர்
(B) தம + உரியர்
(C) தமக்கு + குரியர்
(D) தமக் + உரியர்
4.சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக
(A) இசை தமிழில் வழி நாடகத்தமிழிற்கு இயக்கமில்லை
(B) இசை தமிழில் வழி நாடகதமிழிற்கு இயக்கமில்லை
(C) இசைத் தமிழில் வழி நாடகதமிழிற்கு இயக்கமில்லை
(D)இசைத் தமிழில் வழி நாடகத்தமிழிற்கு இயக்கமில்லை
5.பொருத்துக
(a) உருபன் 1. Excavation
(b) ஒலியன் 2. Phoneme
(c) அகழாய்வு 3. Epigraphy
(d) கல்வெட்டியல் 4. Morpheme
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
( C) 2 1 4 3
(D) 4 2 1 3
6.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
(a) களை 1. விலங்கு
(b) கழை 2. தழைத்தல்
(c) தளை 3. மூங்கில்
(d) தழை 4. நீக்கு
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 3 4 1 2
(C) 4 1 3 2
(D) 1 3 4 2
7. அவன் நல்லன் – எவ்வகைப்பெயர்
(A) இடப் பெயர்
(B) காலப் பெயர்
(C) குணப் பெயர்
(D) தொழில் பெயர்
8. கதிர்வேல் வெற்றிலை தின்றான் என்பது
(A) இனங்குறித்தல்
(B) வெளிப்படைச் சொற்கள்
(C) குறிப்புச் சொற்கள்
(D) வெளிகுறிப்புச் சொற்கள்
9. பொருந்தாத இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
(A) தடக்கை – உரிச்சொற்றொடர்
(B) நின்னகர் – ஆறாம் வேற்றுமைத் தொகை
(C) மடக்கொடி – வினைத் தொகை
(D) வாழ்தல் – தொழிற்பெயர்
10.ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
(A) பகுபதம்
(B) தனி மொழி
(C) தொடர் மொழி
(D)ஒரெழுத்து ஒரு மொழி
11. சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயரென்ன?
(A) கோழி
(B) பேடு
(C) குட்டி
(D) கன்று
12 எல்லா அடிகளும் அளவடியாய் வரும் ஆசிரியப்பாவின் வகை எது?
(A) நேரிசை ஆசிரியப்பா
(B) இணைக்குறள் ஆசிரியப்பா
(C) நிலை மண்டில ஆசிரியப்பா
(D) அடிமறி மண்டில் ஆசிரியப்பா
13.மோனை வகையைக் கண்டுபிடி
”தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்”
(A) முற்று மோனை
(B) கூழை மோனை
(C) இணை மோனை
(D) ஒரூஉ மோனை
14. பொருளறிந்து பொருத்துக
(a) ஒல்காமை 1.சிறப்பு
(b) விழுமம் 2.வலியர்
(c) திண்ணியர் 3.துன்பம்
(d) வீறு 4.தளராமை
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 3 4 2
(C) 2 3 1 4
(D) 1 2 3 4
15. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண் – இக்குறட்பாவில் அற்றம் என்பதன் பொருள் யாது?
(A) இறுதி
(B)உண்மை
(C) அழிவு
(D) ஒழுகுவது
16. ‘கற்பெனும் பெயர் தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்
-இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(A) கண்ணகி
(B)பாஞ்சாலி
(C) சீதை
(D) குந்தி
17. குறிப்பினால் உணரும் கொள்கையான் யார்?
(A) அனுமன்
(B) இராவணன்
(C) வீடணன்
(D) இராமன்
18.”தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்’ என்ற தொடரில் சிதவலர் என்பதன் பொருள் யாது?
(A) ஊன்றுகோல் உடையவர்
(B) தலைப்பாகை கட்டியவர்
(C) வலிமை மிக்கவர்
(D) முயற்சி அற்றவர்
19.நற்றிணை – தொகுப்பித்தவர் யார்?
(A) பன்னாடு தந்த மாறன் வழுதி
(B) உக்கிரப்பெருவழுதி
(C) இளம்பெருவழுதி பொருத்துக
(D) மாறன் வழுதி
20.பொருத்துக
(a) செறு 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து 2. புதுவருவாய்
(c) யாணர் 3. விதை
(d) வட்டி 4. வயல்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 1 3 2 4
(D) 4 2 3 1
21 ‘மணநூல்’ என்று அழைக்கப்படும் நூல்
(A) குண்டலகேமி
(B) சீவக சிந்தாமணி
(C)சிலப்பதிகாரம்
(D)மணிமேகலை
22 “தேனியும் ஆயமும் சித்திரா பதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்” – என்ற தொடரில் ஆயம் என்பதன் பொருள் யாது?
(A) தோழியர் கூட்டம்
(B) பெண்டிர் – ஆடவர் கூட்டம்
(C) மழலைக் கூட்டம்
(D) சான்றோர் கூட்டம்
23.“முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து நல்லிலர் பிழந்து நடங்குதுயர் உறுத்து… என்ற அடிகள் அமைந்து நூல் யாது?
(A) அகநானூறு
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) பரிபாடல்
24.”நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்ற தொடரை பாடியவர் யார்?
(A) கவிமணி தேசிக விநாயகம்
(B) மகாகவி பாரதியார்
(C) பாவேந்தர் பாரதிதாசன்
(D) நாமக்கல் கவினர்
25. ‘ஜோசப்’ என்னும் பெயரின் தமிழாக்கம்
(A) வளன்
(B) சூசை
(C) கொன்ஸ்டான்
(D) தைரியநாதசாமி
26. போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் தலையை வெட்டியப் புலவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) வில்லிபுத்தூரார்
(C) அதிவீரராமபாண்டியன்
(D) தொல்காப்பியர்
27.தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்
(A) கலம்பகம்
(B) உலா
(C) அந்தாதி
(D) பள்ளு
29 ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்
(A) 7
(B) 6
(C) 8
(D) 9
29. பொருத்துக:
(a) சரதம் 1. தூய்மை
(b) பவித்திரம் 2. அரசன்
(c) பெருமாள் 3. கடல்
(d) மகோததி 4. வாய்மை
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 1 4 2 3
(C) 2 3 4 1
(D) 1 2 3 4
30. தாயுமானவர் பிறந்த ஊர்
(A) திருச்சிராப்பள்ளி
(B) திருச்செந்தூர்
(C) திருமறைக்காடு
(D) திருத்தணி
31. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதியவர்
(A) இராமலிங்க அடிகளார்
(B) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
(C)கவிஞரேறு வாணிதாசன்
(D) உவமைக் கவிஞர் சுரதா
32.”தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறுற்-துடித்தெழுந்தே” – என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் யார்?
(A) பாரதியார்
(B) திரு.வி.க
(C) கவிமணி
(D) பாரதிதாசன்
33.தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு- என்று பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) கவிமணி
(C) சுரதா
(D) நாமக்கல் கவிஞர்
34 “சுதந்திர தாகம்” என்னும் புதினத்திற்கு 2001- ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
(A) சி.சு.செல்லப்பா
(B) பிச்சமுத்து. நா
(C) சி. மணி
(D) ஆர் மீனாட்சி
35. ”உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம்” – தோன்றக் காரணமாக இருந்தவர் யார்?
(A) சாலை இளந்திரையன்
(B) பெருஞ்சித்தரனார்
(C) திருவிசு
(D) மறைமலையடிகள்
36. வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்?
(A)தமிழ்ச்சங்கம் தஞ்சை
(B) கரந்தை தமிழ்ச்சங்கம்
(C) மதுரை தமிழ்ச்சங்கம்
(D) சென்னை பல்கலைகழகம்
37. சிறை தண்டனைக்காக நீ வருந்துகிறாயா? என வள்ளியம்மையிடம் கேட்டவர் யார்?
(A) காந்தியடிகள்
(B) இராமலிங்க அடிகள்
(C) பட்டினத்தடிகள்
(D) இளங்கோவடிகள்
38. ஓவியக்கலை எந்த நூற்றாண்டில் தோன்றியது?
(A) ஏறக்குறைய கி.பி. 7ஆம் நூற்றாண்டு
(B) ஏறக்குறைய கி.பி.11ஆம் நூற்றாண்டு
(C) ஏறக்குறைய கி.பி.18 ஆம் நூற்றாண்டு
(D) ஏறக்குறைய கி. பி. 10 ஆம் நூற்றாண்டு
39. சலாம். சபாஷ் என்பன எம்மொழிச் சொற்கள் எனக் கண்டறிக.
(A) வடமொழிச் சொற்கள்
(B) கிரேக்கம் சொற்கள்
(C) உருதுச் சொற்கள்
(D) பேலிச்கச்சிய சொற்கள்
40.எது தவறானது?
(A) தமிழர் தாகரிகமும் பண்பாடும் – அ.தட்சிணா மூர்த்தி
(B) தமிழர் சால்பு – சு. வித்யானந்தன்
(C) தொல்வியல் நோக்கில் சங்ககாலம் – கா.இராஜன்
(D) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – க.ரத்னம்
41. “தமிழ் பேரவைச் செம்மல்” என்னும் பட்டம் – சி வேங்கடசாமி நாட்டாருக்கு வழங்கிய பல்கலைக்கழகம் எது?
(A) தஞ்சை பல்கலைக்கழகம்
(B) மதுரை பல்கலைக்கழகம்
(C) திருச்சி பல்கலைக்கழகம்
(D) திருநெல்வேவி பல்கலைக்கழகம்
42.தந்தை பெரியாரால் “வைக்கம் போர்” நடத்தப்பட்ட ஆண்டு எது?
(A) 1927
(B) 1930
(C) 1916
(D) 1924
43. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் நோய் எது?
(A) பணக்கொடை
(B) குருதிக்கொடை
(C) மணக்கொடை
(D) ஊர்க்கொடை
44. பொருத்துக
(a) புரம் 1. நகரம்
(b) பட்டினம் 2.ஊர்
(c) பாக்கம் 3. நிலம்
(d) புலம் 4. சிற்றூர்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 3 4 2 1
(C) 2 3 4 1
(D) 2 1 3 4
45 “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ எனக் கூறியவர்
(A) சுரதா
(B) இராணி மங்கம்மாள்
(C) ஒளவையார்
(D) திருமங்கையாழ்வார்
46. நோய்க்கு முதல் காரணம்
(A) நொறுக்குத் தீனி
(B) உப்பு
(C) காரம்
(D) புளிப்பு
47. ‘சமரசக் கோயிலை’ அமைத்துச் சென்றவர் யார்?
(A) திரு.வி.கலியாண சுந்தரனார்
(B) வெ. இராமலிங்கம் பிள்ளை
(C) கவிமணி
(D) இராமலிங்க சுவாமிகள்
48.“ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலை இயற்றியவர்
(A) இராமலிங்க அடிகளார்
(B) வீரமாமுனிவர்
(C) இளங்கோவடிகள்
(D)இராமலிங்கம் பிள்ளை
49.“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”- என சிலப்பதிகாரத்தைப் போற்றியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பட்டுக்கோட்டைகலியாண சுந்தரம்
(C) பாரதியார்
(D) சுத்தானந்த பாரதியார்
50.பொருத்துக
(a) கருமுகில் 1. உரிச்சொற்றொடர்
(b) வைவேல் 2.பண்புத்தொகை
(c) உணர்மின் 3.தன்மை ஒருமை வினைமுற்று
(d) அளிக்கு வென் 4.ஏவல் வினைமுற்று
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 4 3 1
(C) 3 1 4 2
(D) 4 3 2 1
51.”புலனழுக்கற்ற அந்தணாளன்” அத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(A) கபிலர்
(B) நக்கீரர்
(C) திருவள்ளுவர்
(D) கம்பர்
52. ‘மிசை’ என்பதன் எதிர்ச்சொல் என்ன?
(A) கீழே
(B) மேலே
(C) இசை
(D) வரை
53. திருமலை முருகள் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது?
(A) சீதா போகம்
(B) சொரி குரம்பை
(C) புழுகு சம்பா
(D) காடை சம்பா
54. பிழையற்ற வாக்கியம் எது?
(A) வருவதும் போவதும் கிடையா
(B) வருவதும் போவதும் கிடையாது
(C) வருவதும் போவதும் கிடையது
(D) வருவதும் போவதும் கிடையாயது
55. நான் வாங்கிய நூல் இது அல்ல – ஒருமை பன்மை பிழை நீக்கி எழுது
(A) நான் வாங்கிய நூல் இது அன்று
(B) நாள் வாங்கியது இது நூல் அல்ல
(C) நான் போங்கியவை நூல் இது அல்ல
(D) நான் வாங்கிய நூல்கள் இது அல்ல
56. ”தை’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A)தொடுத்தல்
(B) ஆடல்
(C) திங்களின் பெயர்
(D) கொடு
57. செய்கின்றாள் -வேர்ச்சொல் தருக
(A) செய்கு
(B) செய்
(C)செய்த
(D) செய்கிற
58 ‘பார்’ என்ற அடிச் சொல்லினை தொழிற் பெயராக்குக
(A) பார்த்து
(B)பார்த்த
(C) பார்த்தல்
(D) படித்தல்
59. கீழ்க்காணும் விடையில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க?
(A) சீப்பு, சங்கு, சிலை, சாவி
(B) சங்கு, சிலை, சாவி, சீப்பு
(C) சங்கு, சாவி, சிலை, சீப்பு,
(D) சிலை, சீப்பு, சங்கு, சாவி
60.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக,
அண்ணன், சென்றார், தம்பி, வீட்டுக்குச்
(A) தம்பி, அண்ணன் வீடு சென்றார்
(B) அண்ணனும் தம்பியும் வீட்டுக்கு சென்றார்
(C) அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றார்.
(D) அண்ணன், வீட்டுக்கு தம்பி சென்றார்.
61. வேங்கை – என்பது எவ்வகை மொழி?
(A) பொது மொழி
(B) தனி மொழி
(C) தொடர் மொழி
(D) கலவை மொழி
62. வயலில் ஆடுகள் மேயந்தில – எவ்வகைத் தொடர் எனக் கண்டெழுதுக
(A) உடன்பாடு
(B) எதிர்மறைத் தொடர்
(C) தன்வினைத் தொடர்
(D) பிறவினைத் தொடர்
63. கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் எது பிற வினைச்சொல்?
(A) கற்றாள்
(B) கற்பித்தாள்
(C) வந்தாள்
(D) போனான்
64. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” இவ்வுவமை வெளிப்படுத்தும் பொருள்
(A) பரந்து விரிந்து இருத்தல்
(B) மண்ணின் மாண்பு
(C) நிலத்தைத் தோண்டுதல்
(D) பொறுமை
65 திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை?
(A) மா, பலா
(B) தென்னை, வாழை
(C) பனை மூங்கில்
(D)தேக்கு, சந்தனம்
66. அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது
(A) வானம்
(B) கடல்
(C) மலை
(D) உலகம்
67. பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை.
(A) 70
(B) 25
(C) 38
(D) 30
68.குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் -எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
(A)தன்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செய்வினை வாக்கியம்
(D) செயப்பாட்டுவினை வாக்கியம்
69. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய சிறுபஞ்சமூலத்தில் கூறப்படாத மூலிகைத் தாவரவேர்
(A) கண்டங்கத்தரி
(B) சிறுவழுதுணை
(C) தூதுவளை
(D) நெருஞ்சி
70. வயிறு புடைக்க உண்டால் நோய்க்கு இடமளிக்கும் என்று கருதி ‘ மீதுண் விரும்பேல்’ என்று கூறியவர் யார்?
(A) ஒளலையார்
(B) பரணர்
(C) கபிலர்
(D) திருமூலர்
71. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – இப்பாடவடிகள் இடம் பெற்று உள்ள நூல்
(A)கலித்தொகை
(B) அகநானூறு
(C) புறநானூறு
(D) முல்லைப்பாட்டு
72. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு சேய்க
(A) பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
(B) பரிபாடல் ஓர் அகப்பறநூல்
(C) பரிபாடலில் வையை ஆறு பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது
(D) பரிபாடலில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
73. கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈந்தவன்
(A) பாரி
(B) காரி
(C) பேகன்
(D) அதியமான்
74.கூற்று 1 : அகநானூற்றுப் பாடல்கள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கூற்று 2 : அவற்றுள், களிற்றியானை நிரை திரை100 பாடல்களைக் கொண்டுள்ளது.
(A) கூற்று இரண்டு சரி
(B) கூற்று 1 மட்டும் சரி
(C) கூற்று 2 மட்டும் சரி
(D) கூற்று இரண்டும் தவறு
75. பொருத்தமுள்ள இணையினை தேர்ந்தெடு
(A) கம்பர் – தாயுமானவர்
(B) சீத்தலைச்சாத்தனார் – இளங்கோவடிகள்
(C) கபிலர் – சேக்கிழார்.
(D) ஒளவையார் – காளிதாகர்
76. கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் நூல் எது?
(A) சதுரகராதி
(B) தேம்பாவணி
(C) வேதியர் ஒழுக்கம்
(D) இரட்சணிய யாத்திரிகம்
77. சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
(A) 5086
(B) 4355
(C) 5027
(D) 5315
78. பிரபந்தம் என்ற வடசொல்லுக்குப் பொருள் யாது?
(A) தூது நூல்
(B) அறிவுரை நூல்
(C) நகைச்சுவை
(D) நன்கு கட்டப்பட்டது.
79. கலிங்கமன்னன் அனந்தியன்மன் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றவன் யார்?
(A) முதல் குலோத்துங்கச் சோழன்
(B) மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
(C) இராசராச சோழன்
(D) இராசேந்திர சோழன்
80. முதல் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதி யார்?
(A) கருணாகரத் தொண்டைமான்
(B) புருடோத்தமன்
(C) தாண்டவராயன்
(D)மகேந்திரவர்மன்
81 பண்டைய கலிங்கம் தற்போது எந்த மாநிலமாக வழங்கப்படுகிறது?
(A) ஆந்திரம்
(B) தமிழ்நாடு
(C) ஒரிசா
(D) தெலுங்கானா
82 நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்
(A) பாரதியார்.
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கண்ணதாசன்
83. துரியோதனனின் தந்தை பெயர்
(A) சகுனி
(B) விதுரன்
(C) அரிச்சுணன்
(D) திருதராட்டினன்
84.சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்த அரசு எது?
(A) கேரள அரசு
(B) சென்னை மாகாண அரசு
(C) கர்நாடக அரசு
(D) ஆந்திர அரசு
85 சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ”வரியும் குரவையும்” நாட்டுப்புறப்பாடல்களே எனக் கூறிய தமிழறிஞர்
(A) இராமலிங்கனார்
(B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(C) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
(D) மு.சண்முகனார்.
86 ”பிசி” என்ற சொல்லில் பொருள் யாது?
(A) பழமொழி
(B)பாடல்
(C) விடுகதை
(D) கதை
87. மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது
அந்தக்காலம் – அது
மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது.
இந்தக்காலம்— என்ற பாடலைப் பாடியவர் யார் ?
(A) உடுமலை நாராயண கவிஞர்
(B) தெய்வக் கவிஞர்
(C) இராஜ் கவிஞர்
(D) ஈரோடு தமிழன்பன்
88. தமிழக அரசின் பரிசுபெற்ற முடியரசனி காவியம் எது?
(A) தேன்மழை
(B) பால்வீதி
(C) எழிலோவியம்
(D) பூங்கொடி
89 “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்” என்றவர்
(A) மு. மேத்தா
(B) அப்துல் ரகுமான
(C) பசுவய்யா
(D) ஈரோடு தமிழன்பன்
90. தமிழின் தொன்மையான கலை வடிவம் எது?
(A) நாடகம்
(B) நடனம்
(C) நாட்டியம்
(D) சிற்பம்
91. மதங்க சூளாமணி என்னும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
(A) விவேகானந்தர்
(B) விபுலானந்தர்
(C) வில்லிப்புத்தூரார்.
(D) வீரமாமுனிவர்
92. கூற்று 1: ‘பேனா’ என்ற புனைப் பெயரில் பல நூல்களை எழுதியவர் பெ.நா.அப்புசாமி
கூற்று 2 : மதுரைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் பெ நா அப்புசாமி
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று இரண்டும் தவறு
(D) கூற்று இரண்டும் சரி
93. “வானம் வசப்படும்” என்ற நூலின் ஆசிரியர்.
(A) பிரபஞ்சன்
(B) யுகபாரதி
(C) தாரா பாரதி
(D) மனுஷ்ய புத்திரன்
94. தமிழ்த்தாத்தா’ என அழைக்கப்படுபவர்?
(A)வள்ளுவர்.
(B)உ வே சா
(C) வள்ளலார்
(D) மறைமலையடிகள்
95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த மாவட்டம் எது?
(A) சேலம்
(B) தருமபுரி
(C) கிருஷ்ணகிரி
(D) நாமக்கல்
96. ஜி.யு போப் அவர்கள் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்?
(A) முப்பதாண்டுகள்
(B) நாற்பதாண்டுகள்
(C) ஐம்பதாண்டுகள்
(D) அறுபதாண்டுகள்
97. சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறானது
இதற்கு காரணமாக இருந்த இருவர் யார்?
(A) பெரியார், அம்பேத்கார்
(B) பெரியார், அறிஞர் அண்ணா
(C) அம்பேத்கார். அறிஞர் அண்ணா
(D) அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி
98. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்றான் என்பதை குறிப்பிடும் நூல்
(A)சீவகரித்தாமணி
(B) வளையாபதி
(C) மணிமேகலை
(D) குண்டலகேசி
99. ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
(A)இராமர்
(B) ரோமர்
(C) ஆட்டோ டியட்டா்ஸ்
(D) டெஸ்கார்ட்டெஸ்
100. எந்தெந்த ஊருக்கு இடையே அமைந்த நெடுஞ்சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது?
(A) இராமேஸ்வரம் – மதுரை (
B) திருச்சி – மதுரை
(C) திண்டுக்கல் – மதுரை
(D) கன்னியாகுமரி – மதுரை