TNPSC இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள் – 2018

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது.
II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது.
III. தென்கலை மாக்கட நியாயம்
IV. வடகலை மார்ச்சால நியாயம்.
(A) 1 மற்றும் II சரியானவை
(B) I மற்றும் III சரியானயை
(C) II மற்றும் IV சரியானவை
(D) II மற்றும் III சரியானவை
2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது
(A) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை
(C) சிலப்பதிகாரம்
(D) திருமந்திரம்
3. அச்சு இயந்திரத்தின் மூலம் பெரியபுராணம் போன்ற சைவ இலக்கியங்களைப் பதிப்பித்தவர்
(A) திரு பூர்ணலிங்கம்
(B) மகாவித்துவான் ராகவையங்கார்
(C) நல்லூர் ஆறுமுக நாவலர்
(D) மு.வ
4. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டை பொருத்தி விடை தெரிவு செய் இந்துமத்தில் உயிர்களின் நால்வகைத் தோற்றம்,
பட்டியல் – I பட்டியல் – II
(a) அண்டலும் – 1. கருப்பையில் தோன்றுவன – மனிதரும் விலங்குகளும்
(b) கவேதஜம் – 2. வித்து, வேர், கொடி, கொம்பு. கிழங்கு இவற்றில்
தோன்றுவன – இவை தாவரங்கள்
(c) உத்பிஜ்ஜம் – 3. வேர்வையில் தோன்றுவன- கிருமி, பேன்
(d) சராயுஜம் – 4.முட்டையில் தோன்றுவன – பறவை, ஊர்வன, நீர்வாழ்வன
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 1 3 4
( C) 1 2 4 3
(D) 3 4 1 2
5.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டை பொருத்தி பட்டில்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தெரிவு செய்
பட்டியல் – I பட்டியல் – II
(a) தேவர் – ஒன்பது இலட்சம்
(b) மனிதர் – பதினொரு இலட்சம்
(c) விலங்கு – பத்தொன்பது இலட்சம்
(d) தாவரம் – பத்து இலட்சம்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
( C) 4 3 2 1
(D) 3 2 1 4
6. பொருத்தமான விடையைக் குறிப்பிடுக
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.
அன்பே சிவமாவ தாகும் அறிகிலார்.
(A) பத்தாம் திருமுறை
(B) 4, 5,6 திருமுறை
( C) 1.2.3 திருமுறை
(D) பன்னிரண்டாம் திருமுறை
7. கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்று எவை?
சமணர்களின் பொய்யுரை கேட்டு கொடுமை புரிந்த மன்னன் யார்? தண்டிக்கப்பட்ட சைவ அடியார்!
I. பல்லவ மன்னள்
II. சோழ மன்னன்
III. திருநாவுக்கரசர்
IV. சுந்தரர்
(A) II, III சரியானவை.
(B) I, III சரியானவை
(C) IV, I சரியானவை
(D) II, IV சரியானவை
8. பட்டியல் I இல் உள்ள சமய குறவர்களோடு பட்டியல் II இல் உள்ள திருமுறைகளோடு பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க
(a) திருஞானசம்பந்தர் 1. 4. 5.6 திருமுறைகள்
(b) திருநாவுக்கரசர் 2. 1.2.3 திருமுறைகள்
(c) சுந்தரர் 3. 8ம் திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 7ம் திருமுறை
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
( C) 4 3 2 1
(D) 3 2 4 1
9. நான் கொல்லுகிறேன் என்று எண்ணுவதும் தான் கொல்லப்படுகிறேன் என்று எண்ணுவதும் இரண்டும் அறியாமை என்று கூறுவது
(A) விஷ்ணு புராணம்
(B) ஸ்ரீமத் பாகவதம்
( C) பகவத் கீதை
(D) மகாபாரதம்
10. மார்கழி மாதம் சைவர்களால் பாடப்படும் பாடல்
(A) திருப்பாவை
(B) திருவெம்பாவை
(C) திருப்பாவை, திருவெம்பாவை
(D) திருவெம்பாவை, ஆண்டாள் பாடல்
11. திருமுருகாற்றுப்படை இயற்றியவர் யார்?
(A) கபிலர்
(B) நக்கீரர்
(C) நல்சார் நத்தத்தனார்
(D) மாங்குடி மருதனார்.
12. கந்த விரதங்கள் யாவை?
(A) வார விரதம். நட்சத்திர விரதம், திதி விரதம்
(B) மாத விரதம், ஆண்டு விரதம், வார விரதம்
(C) நட்சத்திர விரதம் ஸ்தூல விரதம்
(D) திதி விரதம், மாத விரதம், வார விரதம்
13. புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் விழா எது?
(A) கீர்த்திகை
(B) விநயகர் சதுர்த்தி
(C) நவராத்திரி
(D) வைகுண்ட ஏகாதேசி
14. இரண்டாமாயிரம் அல்லது பெரிய திருமொழியை பாடிய ஆழ்வார்
(A) பொய்கையாழ்வார்
(B) திருமங்கையாழ்வார்
(C) திருமழிசையாழ்வார்.
(D) பெரியாழ்வார்
15.”பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்
கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே: ஆயர்தம் கொழுந்தே” என்னும் பாடலை பாடியவர்
(A) ஆண்டாள்
(B) தொண்டரடிப் பொடியாழ்வார்
(C) நம்மாழ்வார்
(D) திருமங்கையாழ்வார்.
16. சைவ சித்தாந்தத்தில் சன்மார்க்கம்…………. என்பது
(A) சரியை
(B) கிரியை
(C) யோகம்
(D) ஞானம்
17. இராமகிருஷ்ணர் அனைத்து சமயங்களையும் அனுஷ்டித்து அனைத்தும் ஒரே…………………. அடைகின்றன என்றார்.
(A) ஊரை
(B) புத்தகத்தை
(C) குறிக்கோளை
(D) உவகை
18. திருமால் தாங்கியுள்ள திருவுருவங்கள் எவை?
(A) சரியை, கிரியை, யோகம், ஞானம்
(B) பரத்துவம், வியூகம், விபவம் அந்தர்யாமி. அர்ச்சை
(C) சாண்டில்யர், ஔபகாயணர் கௌசிகர், பாரத்துவாசர்
(D) வேங்கடநாதர், வேதாந்ததேசிகர், தேசிகப்பிரபந்தம், தேசிகர்
19. சைவசித்தாந்த நூல்கள் பதினான்கில் பொருந்தாத நூல் எது?
(A) சிவஞான போதம்
(B) திருமந்திரம்
(C) சிவஞான சித்தியார்
(D) திருவருட்பயன்
20. “ஆன்மா என்பது மாறாதது. அளவிட முடியாதது அழியாதது. சுத்தமானது அது உடம்பு, மணம் ஆகியவற்றுடன் இருக்கும் போது மேலே சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையாக உணரப்படுகிறது” என்று கூறியவர்.
(A) விசுவாமித்திரர்
(B) கபில முனி
(C) நாரதர்
(D) வால்மீகி
21. ——– இன் முயற்சியால் முதலாம் மகேந்திரன் ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறினான்.
(A) அப்பர்
(B) சுந்தரர்
(C) சம்மந்தர்
(D) மாணிக்கவாசகர்
22. தமிழகத்து சைவ ஆதீன மடங்கள் எத்தனை?
(A) பதினொன்று
(B) பதினாறு
(C) பதினெட்டு
(D) ஒன்பது
23. “ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம்,
மூவர் நிற்கலாம்” என்று கூறியவர்.
(A) திருமிழிசையாழ்வார்.
(B) பெரியாழ்வார்
(C) பொய்கையாழ்வார்.
(D) ஆண்டான்
24. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எவை சரியான பொருத்தம்?
I. பெரிய திருமொழி – திருமங்கையாழ்வார்
II. திருக்குறுந்தாண்டகம் – திருமங்கையாழ்வார்
III. திருநெடுந்தாண்டகம் – திருமங்கையாழ்வார்
IV. முதல் திருவந்தாதி – பொய்கையாழ்வார்
(A) I, II ரியாளவை
(B) III, IV சரியானவை
(C)IV, III, I சரியானவை
(D) I, II, III, IV சரியானவை
25. கலிவிருத்தம் என்னும் யாப்புவகையால் பாடப்பட்டுள்ள நூல்
(A) திருப்புகழ்
(B) திருவதிகை
(C) திருமந்திரம்
(D) திருப்பல்லாண்டு
26. கீழ்க்கண்ட அத்வைத உண்மைகளுள் சரியானவை எவை?
(1) பிரம்மன் ஒன்றே உண்மைப் பொருள்
(2) உலகம் ஒரு பொய்த்தோற்றம்
(3) ஜீவனும் பிரம்மமே ஆகும்
(4) சகுன பிரம்மனே உயர்வானது
(A) 1 மற்றும் 2 சரி
(B) 1 மற்றும் 3 சரி
(C) 1, 2 மற்றும் 3 சரியானது
(D) அனைத்தும் சரியானது
27. புறக்கருவிகளாகிய ஆகாயத்தின் வழி ஈஷணாத்திரம் எது?
(A) மயிர் எலும்பு தோல்
(B) அருத்தம், புத்திரன், உலகம்
(C) குரோதம், லோபம், மோகம்
(D) இடைகலை, பிங்கலை. கழுமுனை
28. தர்மபூத ஞானம் என இராமானுஜர் குறிப்பிடுவது
(A) பிரபத்தி
(B) கடவுள்
(C) உலகம்
(D) ஆன்மா
29. மீமாம்சை தத்துவத்தின்படி ஸ்வதபிரமாணிய வாதம் என்பது
(A) பிறர் ஏற்புடைமை கோட்பாடு
(B) சுய ஏற்புடமை கோட்பாடு
(C) கடவுள் ஏற்புடமை கோட்பாடு
(D) உயிர் ஏற்புடமை கோட்பாடு
30. ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாகக் காணப்படுவது
(A) பரிணாம வாதம் ஆகும்
(B) விவர்த்த வாதம் ஆகும்
(C) சத்காரிய வாதம்
(D) அசத் காரிய வாதம்
31 “பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை ஐயன் அருள்மாறன் சேரலர்கோன். – துய்யப்பட்ட நாதன் அன்பாதாள்தூளி நற்பாணன நற்கவியன் ஈதிவர் தோற் றத்தடைவா மிங்கு’ என்ற செய்யுள் உணர்த்துவது
(A) சமணர்களின் திருநாமம்
(B) பௌத்தர்களின் திருநாமம்
(C) ஆழ்வார்களின் திருநாமம்
(D) சைவர்களின் திருநாமம
32. பொருத்துக:
சம்பந்தரின் பதிகம் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்களைப் பெறும் ஒவ்வொரு பதிகமும்
(a) 8- ஆம் பாடல் – 1.பதிகம் பாடிய சூழலும் தம்மைப்பற்றிய குறிப்பும் கூறுதல்
(b) 9-ஆம் பாடல் – 2.புறச்சமயங்களாகிய சமண புத்தமதங்களைக் கண்டித்தல்
(c)10ஆம் பாடல் – 3.திருமாலும் நான்முகனும் சிவனின் அடிமுட காணமாட்டாமை
(d) 11ஆம் பாடல் – 4.இராவணன் கைலாய மலையை எடுத்த கதை
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 1 2 3 4
( C) 4 3 2 1
(D) 3 2 1 4
33. முதலிலுள்ள பன்னிரு திருமுறைகளை இராசராசசோழனின் வேண்டுகோள்படி தொகுத்தவர்
(A) வேதநாயகம் பிள்ளை
(B) கால்டுவெல் ஐயர்
( C) நம்பியாண்டார் நம்பி
(D) சாமுவேல் பிள்ளை
34. பாண்டிய நாட்டின் மந்திரியாகத் திகழ்ந்தவர்
(A) மாணிக்கவாசகர்
(B) திருஞானசம்பந்தர்
( C)திருநாவுக்கரசர்
(D) சுந்தரர்
35. சென்னை இராமகிருஷ்ணா மிசன் நடத்தும் கிராமப்புற விழிப்புணர்வுத் திட்டம்
I. விவேக முரசு
II. இலவச டியூஷன் மையங்கள்
III. இலவச கம்ப்யூட்டர் மையங்கள்
IV. இலவச நர்ஸிங் அசிஸ்டன்ட் பயிற்சி
(A) I மட்டும்
(B) II மட்டும்
(C) III மட்டும்
(D) I, II, III, IV நான்கும்
36. சகோதரி நிவேதிதா யாருடைய சீடராக 1898ல் இந்தியா வந்தார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(B) சர் இராஜாராம் மோகன்ராய்
(C) தயானந்த சரஸ்வதி
(D) அன்னிபெசன்ட்
37. உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவினை ”சரீரி சரீர சம்மந்தம்” என கூறியவர்………………….. ஆவார்.
(A) விவேகானந்தர்
(B) சங்கரர்
(C) இராமானுஜர்
(D) ரமணர்
38. எந்த உருவத்தில் வழிபட்டாலும் இறைவன் ஒருவனே” என போதித்த மகான்
(A) இராமகிருஷ்ணர்
(B) இராமலிங்கர்
(C)இராமானுஜர்
(D) சங்கரர்
39. சைவ சித்தாந்தம் கூறும் புறச் சமயங்கள் யாவை?
(A) உலோகாயதம், சௌத்திராத்திகம், வைபாடிகம், சமணம்
(B) மீமாம்சம், சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் யோகம், உத்ரமோம்சம், பாஞ்சரத்திரம்
(C) திருமுறைகள், திருமந்திரம், திருவெண்பா
(D) திருஅருட்பா. பெரியபுராணம்
40. சாதி, மதம், சாஸ்த்திரம் ஆகியவற்றை கடுமையாக சாடிய மகான் யார்?
(A) இராமலிங்க அடிகளார்
(B) இரமணர்
(C) அரவிந்தர்
(D) இராமானுஜர்
41. தாயுமான அடிகளின் மாணக்கர்
(A) அருளையர்
(B) பாண்டுரங்கர்
(C) இராமசந்திரர்
(D) புருஷோத்தமன்
42. பொருத்துக
முனிவர்கள் கருத்துக்கள். அடையாளம்
(a) பிர்கு 1. அதர்வன முனிவரின் மகன்
(b) விஷ்வாமித்திரர் 2. பெரிய சிறிய உடல்களின் எல்லைக்கு அப்பால் பட்டது
ஆன்மா
(c) அஸ்தவக்ரா 3. எல்லா உயிர்களின் நலனுக்காக வேத அற்பணிப்பை
தொடங்கி வைத்தார்.
(d) ததிச்சா 4. விஷ்ணு அவருடைய பணிவு பொறுமையாய்
உயர்ந்தவர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
( C) 2 1 4 3
(D) 1 2 3 4
43. தாயுமானவரை சிறு வயதிலேயே அவரை ஆட்கொள்ள வந்த முனிவர் யார்?
(A) நாதமுனிகள்
(B) பரமாச்சாரியர்
(C) ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள்
(D)ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள்
44. கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
கூற்று (A) : பரமாச்சாரியர் “மூலன் மரபில் வரு மௌன குருவே” என்று போற்றப்படுகிறார்.
காரணாம் (R) : அம்முனிவர் திருமூலர் மரபில் வந்தவர்.
(A) (A) மட்டும் சரி (R) தவறு
(B) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
(C) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
(D) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
45. “திருவானைக்கா அம்பிகை அகிலாண்டேஷ்வரியின் துகிலில் வீழ்ந்த பற்றிய கற்பூரத் தீயை கசக்கி அணைக்க முயன்றேன் என்னையறியாது என் கையிலிருந்த இந்த அரிய அரசாங்கப் பத்திரம் பாழ்படுத்தப்பட்டது” என்ற கூற்று
(A) பாம்பன் சுவாமிகள்
(B) தாயுமானவர்
(C) பட்டினத்தார்
(D) ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள்
46. ”இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என்கலைகள் சோர
அழுக்கடிக்கும் வண்ணர் போலாய்” எனக் கூறுபவர்
(A) வள்ளலார்.
(B) தாயுமானவர்
(C) சேக்கிழார்
(D) திருவள்ளுவர்
47. “மண் அளந்தது போதாது என்றன்றோ.
விண் அளந்தாய்!
விண் அளந்தும் போதாது என்றன்றோ!
தீயோனின் தலையளந்தாய்
தீயோனின் தலையளந்தும் போதாது என்றோ
என்னையும் அனந்தாய்!
என்னை அளந்ததோடு அன்போடும் ஆண்டனையே!
அரங்கநீ வாழ்க!” எனப் பாடிய சித்தர்
(A) மாணிக்கச் சித்தர்
(B) திருமூலர்
(C) கவரச் சித்தர்
(D) பாம்பாட்டிச் சித்தர்
48. நியாய – வைசேஷிகத் தத்துவங்கள் இரண்டும் சேர்ந்து………………என்று அறியப்படும்.
(A) சமானதந்திரம்
(B) அசமதந்திரம்
(C) துவைதம்
(D) பிரம்ம சூத்திரம்
49. நியாய சூத்திரத்திற்கு ஜயந்தரால் எழுதப்பட்ட விளக்கவுரைக்கு…….. என்று பெயர்.
(A) வார்த்தீகம்
(B) நியாய மஞ்சரி
(C) பிரம்மசூத்திரம்
(D) நியாய குசுமாஞ்சலி
50. நியாயத் தத்துவம் கூறும் அறிவிற்கான நான்கு காரணிகள்
(A) பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம் சப்தம்
(B) பதி, பசு பாசம், கைவல்யம்
(C) ஆனவம், கன்மம், மாயை விக்க்ஷேபம்
(D) ப்ரமாதா, ப்ரமேயா ப்ரமாணா, ப்ரமா
51. சாத்யாவிற்கும் ஹேதுவிற்கும் உள்ள மாறாத ஒருங்கிணைந்த தொடர்பிற்கு ……………………………….. என்று பெயர்
(A) லிங்கா
(B) வியாபதி
(C) சாதனம்
(D) மாயை
52. அறிந்த விளைவைக் கொண்டு அறியப்படாத காரணத்தை அனுமானிப்பது…………………….. எனப்படும்.
(A) பூர்வவது
(B) சேஷவது
(C) சாமான்யதோ திருஷ்டம்
(D) அன்வயம்
53. இறைவனது இருத்தலுக்கான வாதங்களை உதயனர் தனது………………… நூலில் விளக்கியுள்ளார்.
(A) நியாய மஞ்சரி
(B) நியாய குசுமாஞ்சவி
(C) விவேக சூடாமணி
(D) பிரம்ம சூத்திரம்
54. கீழ்கண்டவற்றுள் மீமாம்சை பற்றிய கோட்பாடுகளை ஆராய்ந்து விடையளி
(1) மீமாம்சை கர்மகாண்டம் ஆகும்
(2) மீமாம்சை சடங்குகளை விவரிக்கிறது.
(3) மீமாம்சை பிரம்மனை விவரிக்கிறது.
(A) 1 மட்டும் சரி
(B)1, 2, 3 அனைத்தும் சரி
(C) 1 மற்றும் 2 சரி
(D) 2 மட்டும் சரி
55. சாங்கிய தத்துவத்தின்படி உயிருடன் நேரடித் தொடர்புடையது
(A) மனம்
(B) புத்தி
(C) அகங்காரம்
(D) ஒளி
56. கீழ்க்கண்ட யோக படிநிலைகளில் முறையாளவை எனவ?
(A) சாதனாபாதம், விபூதிபாதம் கைவயைபாதம், சமாதிபாதம்
(B)சமாதிபாதம், சாதனாபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம்
(C) விபூதிபாதம், கைவல்யபாதம், சமாதிபாதம், சாதனாபாதம்
(D) கைவல்யபாதம், சமாதிபாதம், சாதனாபாதம், விபூதிபாதம்
57.அஷ்டாங்க யோகத்தில் புலன்களைக் கட்டுப்படுத்தும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) இயமம்
(B) நியமம்
(C) பிரத்தியகாரம்
(D) தாரணம்
58. யோகத்தின் அந்தரங்க சாதனங்களாக இருப்பவை
(A) இயமம்; நியமம் ஆசனம்
(B) நியமம், ஆசனம், பிராணயமம்
(C) ஆசனம், பிராணயமம், தியானம்
(D) தாரணம், தியானம், சமாதி
59. மிமாம்சை தத்துவத்தின் படி, செயல்களுக்கான பலன்களை வழங்குவது
(A) கடவுள்
(B) உயிர்
(C) அழல்வா
(D) வேதம்
60. பிரபாகரரும், குமரிலரும் ஏற்றுக்கொண்ட வாழ்வின் இலட்சியமானது
(A) தர்மம்
(B) வேதம் பணிக்கும் கடமைகளை ஆற்றுவது
(C) விடுதலை
(D) சேவை
61. ரௌரவ ஆகமத்தின் விரிவாக்கமாக இருப்பது
(A) சிவப்பிரகாசம்
(B) திரு அருட்பயன்
(C) சிவஞான போதம்
(D) திருவாசகம்
62. எந்த ஒரு தேசிய திருவிழா பெண் தெய்வங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது?
(A) தீபாவளி
(B) நவராத்திரி
(C) பொங்கல்
(D) ஓணம்
63. விஷ்ணு அவதாரங்கள்…………. ஆகும்.
(A) எட்டு
(B) ஒன்பது
(C) பத்து
(D) பதினொன்று
64. தசரா பண்டிகை……………………. இரவுகள் கொண்டாடப்படுகின்றன
(A) 8 இரவுகள்
(B) 9 இரவுகள்
(C) 10இரவுகள்
(D) 11இரவுகள்
65. இந்து கோயில்கள்……………-இன் அடிப்படையிலேயே கட்டப்படுகின்றன.
(A) ஆகமங்கள்
(B) வேதங்கள்
(C) உபநிடதங்கள்
(D) கீதை
66. சூச்சம லிங்கம்
(A) கொடிமரம்
(B) கோபுரம்
(C) விமானம்
(D) கலசம்
67. ஆகாய ஸ்தலம்………………………………ஆகும்.
(A) காளஷஸ்தி
(B) திருவண்ணாமலை
(C) சிதம்பரம்
(D) திருவாரூர்
68. கீழ்க்கண்ட பட்டியல்களைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
(a) முழங்கால் 1. சண்டிகேசுவரர்
(b) வலது செவி 2 நடராஜர்
(c) இடது செவி 3. ஆஸ்தான மண்டபம்
(d) மார்பு 4. தட்சணாமூர்த்தி
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 4 2 1 3
( C) 2 3 4 1
(D) 1 4 3 2
69. வகைப்படுத்தப்பட்ட இந்திய நடனங்கள்
(A) தாண்டவா, லஸ்யா
(B) பாவ, நச
(C) நிரிட்டா, சிஸ்யாஸ்
(D) நாயகி, நாயகா
70. இதில் எது சடப் பொருள் கலாச்சாரம்?
(A) வேளாண்மை
B) பொய்யான நம்பிக்கை
(C) கட்டுக்கதைகள்
(D) பாரம்பரியம்
71. இவற்றில் எந்த மூன்று கலாச்சாரத்தின் பரிமாணங்கள்?
(A) (i) ஏற்றுக் கொள்ளப்பட்ட அறக் கொள்கைகள்
(ii) இசை, கலை இலக்கியம்
(iii) உலகை அர்த்தமுள்ளதாகச் சொல்லுதல்
(B) (i) நவீன மதிப்பு,
(ii) நவீன குடியரசு அரசியல் சமயம்
(iii) சமயம்
(C) (i) கொள்கையில் ஏற்றத்தாழ்வு
(ii) அதிகாரப் பகிர்வு
(iii) கலாச்சார வேற்றுமை
(D) (i) சமூக ஒற்றுமை
(ii) பூரண உண்மை
(iii) சாதி பாதுகப்பு
72. கோபுர தரிசனம் கடவுளது பாத தரிசனம் என்பதை எவ்வாறு அழைக்கிறோம்?
(A) பிரமாந்திர மத்ய கபாலத்வாரம்
(B) சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம்
(C) மூலப்பிரகிருதி
(D) மூலலிங்கம்
73. பின்வரும் தகவல்களில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
(A) ஒரு கோவில் எந்த மூர்த்திக்குரியதோ அந்த மூர்த்தியை அங்கு பிரதிட்டை செய்யப்படாதிருத்தல்
(B) அதன் நேராக அந்த மூர்த்திக்கு உரிய வாகனம் அல்லது ஊர்தியை அமைத்திருப்பர்
(C) அதன் பின் ஒரு பலி பீடத்தை அமைப்பர்
(D) ஆலயங்களில் கர்ப்ப கிரகம் முக்கியமானது
74. நமது முன்னோர்கள்………………… கடவுள் தன்மையுடையவனவாகக் கருதி வழிபட்டு வந்தனர்.
(A) கலைகளை
(B) மரங்களை
(C) மலைகளை
(D) மலர்களை
75. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் திரு ஆபரணங்கள் என அழைக்கப்படுபவை எவை
I. தலைப்பில்லை மற்றும் கொப்பு
II. காசுமாலை மற்றும் வங்கி
III. தலைச் சூடி மற்றும் மாலை
IV. மகரகண்டி மற்றும் மாலை
(A) I மற்றும் III
(B) II மற்றும் IV
(C) III மற்றும் IV
(D) I மற்றும் II
76. மாவட்ட குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம்
(A) 7வருடங்கள்
(B) 5 வருடங்கள்
(C) 3 வருடங்கள்
(D)4 வருடங்கள்
77.கீழ்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
ஆணையர் பணிக்கு நியமனம்
1. நேரடி தேர்வின் மூலம் நியமிக்கப்படுகிறது.
2.பதவி உயர்வின் மூலம் துணை ஆணையரை நியமிக்கலாம்
3. தமிழ்நாடு நீதித்துறை சார்ந்தவராக இருக்கலாம்
4 ஆசிரியராக இருக்கலாம்
(A) 1 மட்டும் சரி
(B) 2 மற்றும் 3 சரி
(C) 1 மற்றும சரி
(D) 1, 2, 3 சரி
78. இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறநிலைய சொத்துக்கள் கீழ் வராத சில சட்டங்கள்
(அ) மத அறநிலைய சொத்துக்கள் சட்டம், 1863
(ஆ) மத அறநிலைய சொத்துக்கள் சட்டம், 1867
(இ) தொண்டு அறநிலைய சொத்துக்கள் சட்டம், 1890
(ஈ) மத அறநிலைய சொத்துக்கள் சட்டம், 1875
(A) (அ) மற்றும் (இ) சரி
(B) (அ) மற்றும் (ஆ)சரி
(C) (இ) மற்றும் (ஈ) சரி
(D) (அ), (ஆ) மற்றும் (எ) சரி
79. தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆணையர் பதவியில் உள்ளவர்………………ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்.
(A) ஆத்திச் சமயங்களை
(B) நாத்திகச் சம்பங்களை
(C) இந்து சமயத்தை
(D) இவை அனைத்தும்
80. சமண சமய நிறுவனங்கள் மற்றும் பிற அறக்கட்டளைகள் தொடர்பான அறிவிப்பு எந்த விதிகளின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
(A) G.O. Ms. No.660
(B) G.O. Ms. No.661
(C) G.O. Ms. No.662
(D) G.O. Ms No.663
81. கோயிலின் அறங்காவவர் ஒருங்கு சேர்க்கப்பட்ட பதிவேடுகளை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும்?
(A) 3
(B) 6
(C) 10
(D) 12
82. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அறங்காவலருக்கான தகுதி ஆகும்.
(A) கடவுள் நம்பிக்கைக் கொண்டிருத்தல்.
(B) நன்னடத்தை புகழ் அறநிறுவனம் அமைந்துள்ள இடத்து மக்களது மரியாதை செல்வாக்கு பெற்றிருத்தல்
(C) அந்நிறுவன செய்ல்பாடுளில் உட்படுத்திக் கொள்ள நேரத்தை ஒதுக்கியும் ஈடுபாடு கொண்டும். இருந்தல்
(D) இவை அனைத்தையும் கொண்டிருத்தல்
83. தமிழ்நாடு HR & C.E. Act 1959-ன் படி சமய நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்.
(A) இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்
(B) இந்து அறநிலையத்துறை ஆணையர்
(C) இந்துசமய அறநிலையத்துறை இயக்குநர்
(D)சமய நிறுவன அறங்காவலர்
84. சமய நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையிலான பட்டியல்களில் பொருந்தாதது எது?
(A) பத்தாயிரத்துக்குக் குறையாதது மற்றும் இரண்டு லட்சத்திற்கு குறைவானது
(B) இரண்டு இலட்சத்திற்கு குறையாதது மற்றும் பத்து லட்சத்திற்கு குறைவானது
(C) பத்து வட்சத்திற்கு குறையாதது
(D) இருபது லட்சத்திற்கு குறையாதது.
85. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் அறங்காவலருக்கு குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அல்லாததை தேர்ந்தொரடு
(A) கடவுள் நம்பிக்கை உடையவர்
(B) கோயில் அமைவிடத்தில் நன்னடத்தையைப் பெற்றவர்.
(C) சமயப் பணிகளில் ஆர்வமுடையவர்.
(D) கோயிலுக்கு அன்பளிப்புகளை வழங்குபவர்
86. கோயில்களின் வரவு-செலவு அறிக்கை சமாப்பித்தல் தொடர்பானவற்றுள் பொருந்தாதது எது?
(A) மடங்களின் வரவு செலவு அறிக்கையை ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
(B) பிரிவு 46-ல் உள்ளிட்ட நிறுவனங்களின் வரவு-செலவு அறிக்கையை இணை இயக்குநருக்கு சமாப்பிக்க வேண்டும்
(C) ஆதீனங்களின் வரவு செல்வு அறிக்கையை செயலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்
(D) பிற நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கையை உதவி இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும்
87. கோயிலின் ஆண்டு வருமானம் பத்து லட்சத்திற்கும் அதிகமாயின் அதன் வருமான அறிக்கையை யாருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
(A) இணை ஆணையர்
(B) உதவி ஆணையர்
(C)துணை ஆணையர்
(D) ஆணையர்
88. அன்னதானத் திட்ட நிதி எங்கிருந்து பெறப்படுகிறது?
(A) பொது மக்களின் பங்களிப்புகள்
(B) கோயில்களின் உபரி வருவாய்
(C)இந்து சமய அறநிலையத்துறை பொது நிதி
(D) இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக நிதி
89. கோயில்களில் வழங்கப்படுகின்ற பிரசாதங்களில் அல்லாது எது?
(A)இலை மற்றும் பூ
(B) துளசி மற்றும் வில்வம்
(C)விபூதி மற்றும் குங்குமம்
(D) வெல்ல நீர் மற்றும் பால்
90. அறங்காவலருக்கு எதிராக ஆணையரால் பிறப்பிக்கப்படும் உத்தரவை எதிர்த்து அறங்காவலர் ……………………………முறையிடமாம்
(A) முதமைச்சரிடம்
(B) நீதி மன்றத்தில்
(C)செயல் அலுவலரிடத்தில்
(D)துறை அமைச்சரிடம்
91. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A) – அரசியல் சாசனச் சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றும் உரிமையினை அளித்துள்ளது
காரணம் (R) – சமயம் மனித சமுதாயத்தை உயர்நிலை சிந்தனைக்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்த காரணி
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி
(B) (A) மட்டும் சரி (R) தவறு
(C) (A) மற்றும் (R) சரி (R), (A) க்கு சரியான விளக்கம்
(D) (A) மற்றும் (R) சரி, (R), (A}க்கு சரியான விளக்கமல்ல
92.கீழ்க்கண்ட வாக்கியங்களின் அடிப்படையில் சரியான விடை
கூற்று (A) – இந்து சமயத்தைப் பின்பற்றாதவர் அறங்காவலருக்கான தகுதியை இழக்கிறார்.
காரணம் (R) – அறங்காவலர் சமய நம்பிக்கை உரியவராக இருந்தல் வேண்டும்.
(A) (A) சரி, (R) – தவறு
(B) (A) மற்றும் (R) சரி
(C) (A) மற்றும் (R) சரி. (R), (A) க்கு சரியான விளக்கம்
(D) (A) மற்றும் (R) சரி, (R). க்கு சரியான விளக்கமல்ல
93. கீழ்க்கண்ட வாங்கியங்களை ஆராய்த்து உரிய விடையைத் தேர்ந்தெடு
கூற்று (A) – அறக்கட்டளையின் வருமானத்தை தேவையான வெறு செலவினத்திற்கும் பயன்படுத்தலாம்.
காரணம் (R) – அறக்கட்டளையின் நோக்கம் நிறைவடையவில்லை.
(A) (A) சரி, (R) – தவறு
(B) (A) மற்றும் (R) சரி
(C) (A) மற்றும் (R) சரி, (R). க்கு சரியான விளக்கமல்ல
(D) (A) மற்றும் (R) சரி. (R), (A) க்கு சரியான விளக்கம்
94. பதிவேடுகளை அளிக்கக் கோரும் அரசின் அதிகாரத்திற்கு பொருந்தாதது எது?
(A) வழக்குகள் தொடர்பான ஆவணங்கள்
(B) நடைமுறையை திருப்தி செய்து கொள்ளல்.
(C) வழக்குகள் தொடர்பில்லாத ஆவணங்கள்
(D) நிதி தொடர்பல்லாத ஆவணங்கள் மட்டும்
95. கூற்று (A) – அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த ஆணையால் 90 நாட்களுக்குள் அரசுக்கு முறையீடு செய்யலாம்.
காரணம் (R) – முறையீடு பற்றிய குறிப்புகள் பிரிவு 36ல் உள்ளது.
(A) (A) மட்டும் சரி
(B) (R) மட்டும் சரி
(C) (A) மற்றும் (R) சரி. (R), (A)க்கு சரியான விளக்கமாகும்
(D) (A) மற்றும் (R) சரி. (R), (A)க்கு சரியான விளக்கமல்ல
96. உபரிநிதி பயன்பாடு கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் வருகிறது.
(A) பிரிவு 38
(B) பிரிவு 56
(C) பிரிவு 70
(D) பிரிவு 66
97. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையரால் பிறப்பிக்கப்படும் உத்தரவு பாதிக்கப்படுவதாகக் கருதும் நபர் 30 நாட்களுக்குள் ஆணையரிடம்……………………………….. கீழ் மேல்முறையீடு செய்யலாம்.
(A) தமிழ்நாடு சட்டம் II 1927ன்
(B) தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் (திருத்திய) சட்டம் 1967ன்
(C) தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் (திருத்திய) சட்டம் 1968ன்
(D) பிரிவு 80 ன்
98. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துக்களை உரிய அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு………………………………சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
(A) ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை
(B) 10 ஆண்டுகள் வரை
(C) 7 ஆண்டுகள் வரை
(D) மூன்று மாதங்கள் முதல் 5ஆண்டுகள் வரை
99. முல்லை நிலத்தில் மிகுதியாகக் காணப்பெறும் பூ எது?
(A) காயாம் பூ
(B) குறிஞ்சிபூ
(C) முல்லை பூ
(D) பூவைப்பூ
100. சென்னை, மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1897
(B) 1991
(C) 1800
(D) 1700