திருமுருகாற்றுப்படை குறிப்புகள்
✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார். அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு ✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர். ✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும். ✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது. ✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும். ✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும். ✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று…

