தமிழ் இலக்கண வினா விடைகள் – 100

இலக்கணம் வினா விடைகள்

1. சந்திர ஓடம்‌ வானக்கடலில்‌ நீந்தியது – இதில்‌ வந்த அணி

உருவக அணி


2. “மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்‌” – இதில்‌ வந்த நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌

தகுதி


3. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌

அறம்‌ செய விரும்பு

4. பன்மை விகுதி பெற்று வராத சொல்‌

மணல்‌


5. தோன்றல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌

பூங்கொடி


6. “தந்தையுடன்‌ மைந்தன்‌ வந்தான்‌” என்பதில்‌ உள்ள –  ‘உடன்‌’

4ம்‌ வேற்றுமை

7. உயர்திணை இருபாற்‌ பொதுப்பெயர்‌

மேதை

8. நாள்‌ + குறிப்பு என்பதை சேர்த்து எழுத வருவது

நாட்குறிப்பு


9, ஆண்‌, பெண்‌ இருபாற்கும்‌ பொதுவாக வழங்காத சொல்‌

நம்பி


10. ஆண்டு +  திவசம்‌ என்பதைப்‌ புணர்த்தினால்‌

ஆட்டைத்தீவசம்‌


11. “மலையிற்‌ சிறியது குன்று” இதில்‌ ‘மலை’ ஏற்றுள்ள வேற்றுமை

5 ம்‌ வேற்றுமை 

12. உவமைத்‌ தொகை ஒன்றைக்‌ குறிப்பிடுக

பவளவாய்‌

13. பெயரெச்சம்‌ இடம்‌ பெறும்‌ வாக்கியம்‌

வந்த மாடு


14. “இப்பரிசு எனது நண்பியால்‌ அனுப்பப்பட்டது” என்பது
       

செயற்பாட்டு வினை வாக்கியம்


15. “மக்களிடையே ஒற்றுமை ஓங்குக” என்பது

வியங்கோள்‌ வாக்கியம்‌


16. கெடுதல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌

மரவேர்‌


17. எழுத்துப்‌ போலிக்கு உதாரணம்‌ அல்லாதது

கந்தல்‌

18. விளித்‌ தொடருக்கு உதாரணம்‌

இராமா வா

19. “மதுமிதா உதைபந்தை உதைத்தாள்‌” உதைபந்து’ என்பது

வினைத்தொகை


20. “யாகாவாராயினும்‌ நாகாக்க வேண்டும்‌” என்பது

கூற்றுவாக்கியம்‌


21. “மதியாதார்‌ தலைவாசல்‌ மிதியாதே” இதில்‌ எழுவாய்‌

நீ


22. “திருவள்ளுவர்‌ திருக்குறளை இயற்றினார்‌” என்ற வாக்கியம்‌

செய்வினை


23. “இங்கே வந்தவனைக்‌ காணவில்லை” இதில்‌ ‘வந்தவனை’ என்பது

வினையாலணையும்‌ பெயர்‌


24. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌

துணை போனாலும்‌ பிணை போகாதே


25. “யான்‌ வந்தான்‌” என்பது

இடவழு


26. குற்றியலுகரச்‌ சொல்‌

ஆண்டு

27. இருநோக்கு இவளுண்கண்‌ உள்ளது
எண்வழுவமைதி
28. பொற்றொடி என்பது

பண்புத்தொகை


29. “அப்பெண்‌ வெள்ளை உடுத்தி வந்தாள்‌”

குணவாகு பெயர்‌


30. விகாரம்‌ கொண்ட சொல்‌

வந்தனன்‌


31. உயிர்மெய்‌ வல்லெழுத்துக்கள்‌

72


32. உயிர்மெய்‌ குற்றெழுத்துக்கள்‌

90


33. உயிருடனோ மெய்யுடனோ சேராத எழுத்து
 

ஆய்தம்‌


34. கவ்வியது என்பதில்‌ உள்ள இடைநிலை

ய்‌


35. “முற்றத்து மா” என்பதன்‌ சாரியை

அத்து


36. வினைச்‌ சொல்லின்‌ காலங்காட்டும்‌ ஒர்‌ உறுப்பு

கடைநிலை


37. வினைச்சொல்லோடு பெயர்ச்சொல்‌ காணப்பட்டு நிற்கும்‌ தொடர்‌ மொழி

நிலம்‌ பிளந்தது


38. “பசுவின்‌ வால்‌” என்ற தொடரில்‌ ‘பசுவின்‌’ என்பதில்‌ வந்த ‘இன்‌’

வேற்றுமை உருபு


39. பெயராகவும்‌ வினையாகவும்‌ அமையக்‌ கூடியது

கல்‌


40. எழுவாயும்‌ செயற்படுபொருளும்‌ மறைந்து நிற்கும்‌ வாக்கியம்‌

நன்றாய்‌ படி


41. வாக்கியத்தினை காட்டுவது

போ


42. “வானக்கடலில்‌ வெள்ளியோடம்‌ ஒன்று கண்டேன்‌” ‘வானக்கடல்‌’என்பதில்‌ உள்ள அணி

உருவகம்‌ 

43. எச்சமாயும்‌ முற்றாகவும்‌ வழங்கும்‌ வினைச்சொல்‌

உண்ணும்‌


44. “கரியமனிதன்‌” என்பதில்‌ ‘கரிய’ என்பது

குறிப்பு வினைப்‌ பெயரெச்சம்‌


45. உம்மைத்‌ தொகை

சேர, சோழ, பாண்டியர்‌


46. புளியம்பழம்‌ என்பதில்‌ இடம்பெற்றுள்ள ‘அம்‌’ என்பது

சாரியை


47. செயற்படுபொருள்‌ அற்ற வாக்கியம்‌

அனுமன்‌ அசோகவனம்‌ சென்றான்‌


48. “குளநெல்‌” என்பதில்‌ இடம்பெற்றுள்ளது எவ்வகைப்‌ புணர்ச்சி

கெடுதல்‌


49. “வா” என்னும்‌ அடியாகப்‌ பிறந்த பெயர்‌

வாயில்‌


50. ஆசிரியர்‌ – இதைப்‌ பிரித்து எழுதினால்‌

ஆசு + இரியர்‌

51. “ஆசிரியரைக்‌ கண்டதும்‌ சீனியன் சால்வையை எடுத்து அரையிற்‌கட்டினான்‌” இதில்‌ வந்துள்ள ஆகுபெயர்‌

அரை


52. தமிழ்‌ நெடுங்கணக்கு ஒழுங்கில்‌ அமையாத எழுத்துக்‌ கூட்டம்‌

ச, ம, ப, ற


53. ஆக்கப்‌ பெயராக வருவது

வானொலி

54. “கூலி வேலை செய்தான்‌” என்பதில்‌ ‘கூலி வேலை” என்பது

நான்காம்‌ வேற்றுமைத்‌ தொகை


55, சந்தி பிரிக்கும்‌ வகையால்‌ இருவேறு பொருள்‌ கொள்ளத்தக்கஒரு புணர்மொழி

பொன்னன்று


56. “தாயோடறுகவை போம்‌” இதில்‌ ‘அறுசுவை’ என்பது ‘

உவமைத்‌ தொகை


57. “இன்று விடுமுறை என்று மாணவர்‌ நினைத்தனர்‌” இதில்‌ உள்ளஇடைச்சொல்‌

என்று

58. “நல்லன்‌” என்பது

குறிப்பு வினை முற்று


59. பெயராகவும்‌ வினையாகவும்‌ வழங்கும்‌ ஒரு சொல்‌

பாய்‌

60. பயனிலை மறைந்து நிற்கும்‌ வாக்கியம்‌

துறவிக்கு வேந்தன்‌ துரும்பு


61. எண்‌ அடையை ஏற்று வந்த பெயர்ச்சொல்‌

மூன்று முகம்‌


62. பெயராக மட்டும்‌ வழங்கும்‌ ஒரு சொல்‌

செல்லம்மா


63. இருபாற்கும்‌ பொதுவாக வழங்காத சொல்‌

பாங்கி

64. “கண்ணன்‌ பாட வசந்தா ஆடினாள்‌” இதில்‌ ‘பாட’ என்பது

தெரிநிலை வினையெச்சம்‌


65. எச்சமாகவும்‌ முற்றாகவும்‌ வழங்கும்‌ ஒரு சொல்‌

வீழும்‌


66. “வேற்கண்ணாள்‌ வந்தாள்‌” – ‘வேற்கண்‌ என்பது’

வேற்றுமைத்‌ தொகை

67. “அருமந்த கொய்யாப்‌ பழத்தை அணில்‌ அரித்து விட்டது” –‘அருமந்த’ என்பது

மரூஉ


68. இருதிணை” ஐம்பால்‌ மூவிடத்துக்கும்‌ பொதுவான தெரிநிலைவினைமுற்று

இல்லை

69.. கருங்குழல்‌ ஆடினாள்‌ என்பது

அன்மொழித்‌தொகை


70. மொழிக்கு இறுதியில்‌ நின்று வினாப்பொருளை உணர்த்தும்‌ எழுத்து

ஆ, ஓ


71. “உண்டாள்‌” என்ற சொல்லில்‌ உள்ள பகுபத உறுப்புக்கள்‌

பகுதி, இடைநிலை, விகுதி


72. பெயர்ச்‌சொல்லின்‌ சிறப்பம்சம்‌

வேற்றுமை ஏற்றல்‌


73. பாடினான்‌ என்ற சொல்லின்‌ பகுதி

பாடு


74. “சுடுசரம்‌ வீழ்வதன்‌ முன்னமே போமின்‌” இதில்‌ ‘சுடுசரம்‌’ என்பது

வினைத்தொகை


75. பகுபத உறுப்புக்கள்‌ ஆறும்‌ பெற்று வந்த சொல்‌

நடந்தனன்‌


76. எச்சமாயும்‌ முற்றாகவும்‌ வழங்கும்‌ ஒரு வினைச்‌ சொல்‌

உண்ணும்‌


77. சந்திரன்‌ + உதயம்‌ என்பதைச்‌ சேர்த்து எழுதினால்‌

சந்திரோதயம்‌


78. சுட்டெழுத்து அல்லாதது

ஓ


79. திரிதல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌

பாற்குடம்‌


80. தனித்துப்‌ பொருள்‌ தராத சொல்‌

இடை


81. உடன்பாடாகவும்‌ எதிர்மறையாகவும்‌ வந்த ஏவல்‌ வினைமுற்று

வாராய்‌


82. “பசி வந்தால்‌ பத்தும்‌ பறந்து போம்‌” – “பத்து’ என்பது

அளவையாகு பெயர்‌


83. பகாப்பதச்‌ சொல்லுக்கு உதாரணம்‌

மண்‌


84. மொழிக்கு முதலில்‌ வரக்கூடிய உயிர்மெய்‌ எழுத்துக்கள்‌

ம, ந, ப


85. “நான்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வையகம்‌” என்ற வாக்கியத்தில்‌ எழுவாய்‌

வையகம்‌


86, பெயரெச்சமும்‌ வினையெச்சமும்‌ சேர்ந்து நிற்கும்‌ வாக்கியம்‌

பாய்ந்து வந்த மாடு


87. “கள்ளக்‌ கந்தன்‌ வெள்ளைப்‌ பூனையை வெட்டிக்கொன்றான்‌”இதில்‌ வரும்‌ செயப்படுபொருள்‌ அடைமொழி

பூனை


88. அஃறிணை என்னும்‌ பதத்தைப்‌ பிரித்தால்‌

அல்‌ + திணை


89. பலர்பால்‌ விகுதிகள்‌ மட்டும்‌ உடையது

அர்‌, ஆர்‌, மார்‌, கள்‌


90. காரண இடுகுறிப்‌ பெயராக அமைவது

காற்குடி


91. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப்‌ பொருளில்‌ வரும்‌ வேற்றுமை

3ம்‌ வேற்றுமை 

92. உகரத்தின்‌ மாத்திரை குன்றாத சொல்‌

கதவு

93. இருவேறு எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌

பாடு, ஆடுகிறேன்‌


94. வினையாக மட்டும்‌ வரும்‌ சொல்‌

தேடு


95. பால்‌ பகா அஃறிணைப்‌ பெயர்‌

தேங்காய்‌


96. தமிழ்‌ எழுத்துக்களில்‌ மிக அருமையாகப்‌ பயன்படுத்தப்படும்‌ எழுத்து

ஆய்த எழுத்து


97. எழுத்துப்‌ போலிக்கு உதாரணம்‌

நேயம்‌


98. பகுதி இரட்டித்துக்‌ காலங்காட்டுவன

புக்கான்‌, விட்டான்‌


99. “கடற்காற்று உடலுக்கு இதமாக இருந்தது” – இங்கே கடற்காற்று என்பது.

வேற்றுமைத்‌ தொகை


100. நீ வந்தாள்‌ என்பது

இடவழு

Leave a Reply

Translate »