
யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்
செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும். யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை, 1.எழுத்து 2.அசை 3.சீர் 4.தளை 5.அடி 6.தொடை என்பன… 1.எழுத்து: தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.குறில் (க) 2.நெடில் (கா) 3.ஒற்று (க்) என்பனவாம். தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து…