உவமை அணி என்றால் என்ன வகைகள் யாவை

உவமை அணி என்றால் என்ன? வகைகள் யாவை?

“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
 ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
 ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டியலங்காரம்.30)
      பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகவும் பலவாகவும் சேர்ந்து வருகின்ற பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமையணி எனப்படும்.
 (உம்)   “தாமரை யன்று முகமே ஈங்கிவையும்
 காமரு வண்டுஅல்ல கருநெடுங்கண் – தேமருவு
 வல்லியின் அல்லள் இவள்என் மனம்கவரும்
 அல்லி மலர்க்கோதை யாள்”
 இது தாமரை மலரல்ல; இவள் முகமே!…

Read More
உருவக அணி என்றால் என்ன அதன் வகைகள் யாவை

உருவக அணிஎன்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

”உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
 ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்”
 உவமையாகிய பொருளையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு இல்லாது தவிர்த்து இரண்டுமே ஒன்றுதான் எனத் தோன்றுமாறு ஒருமித்து உரைப்பது உருவக அணி எனப்படும்.
 (உம்)   “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
 வெய்ய கதிரோன் விளக்காகச்  – செய்ய
 சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
 இடராழி நீங்கவே என்று”
 உலகம் விளக்காகவும் கடல் நெய்யாகவும் சூரியன் ஒளியாகவும் (விளக்கு) சக்கராயுதம் தரித்த திருமால் திருவடிக்கு,…

Read More
TNPSC Question 2019

TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2019 

TNPSC Questions (Genaral Tamil) : 2019  1.உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தைக் கூறினார்? (A) பெரிய புராணம் (B) கந்த புராணம் (C) சீறாப் புராணம் (D) திருவிளையாடற் புராணம் 2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக. (A) வீடுதோறும் + இரந்தும் (B) வீடுதோ+றும் +இரந்தும் (C) வீடுதோர் +இரந்தும் (D) வீடுதோறு +இரந்தும் 3.பொருத்தமில்லாத இணை (A) இன்மை – இன்பம்…

Read More
TNPSC - Temple - 2018

TNPSC  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 – மாதிரி வினாத்தாள்  – 2018 

1.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? I. தென்கலை நாலாயிர பிரபந்தத்தினைப் பிரமானமாக கொண்டது. II. வடகலை பிரஸ்தானத்திரயங்களைப் பிரதானமாக கொண்டது. III. தென்கலை மாக்கட நியாயம் IV. வடகலை மார்ச்சால நியாயம். (A)  1 மற்றும் II சரியானவை (B) I மற்றும் III சரியானயை (C) II மற்றும் IV சரியானவை (D) II மற்றும் III சரியானவை 2. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” நுதல்வழி நாட்டத் திறையோன் கோயிலும் என்பது (A) சீவகசிந்தாமணி…

Read More
தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்றால் என்ன?

     தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர்.
 பெயரும் வரலாறும்
     தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப்…

Read More
வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும். எழுவாய் ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும். பயனிலை ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது. செயப்படு பொருள்  ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற…

Read More
யாப்பு இலக்கணம்

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

     செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
 யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
 1.எழுத்து
 2.அசை
 3.சீர்
 4.தளை
 5.அடி
 6.தொடை என்பன…
 1.எழுத்து:
       தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 1.குறில் (க)
 2.நெடில் (கா)
 3.ஒற்று (க்) என்பனவாம்.
      தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து…

Read More
வழுவமைதி

வழு என்றால் என்ன? வழாநிலை என்பது யாது? வழுவமைதியின் வகைகள் யாது?

வழு என்றால் இலக்கண முறைப்படி குற்றம் என்று பொருள். இவ்வகைப்பாட்டில் வழு  என்பதை கீழ்க்கண்டவாறு பாகுப்படுத்தலாம்.
 (அ) வழாநிலை             – குற்றம் இல்லாதது (பிழை இன்றி பேசவதும்
  எழுதுவதும்                                                ஆகும்)
 (ஆ) வழு       …

Read More
இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கண வினா விடைகள் – 100

1. சந்திர ஓடம்‌ வானக்கடலில்‌ நீந்தியது – இதில்‌ வந்த அணி
 உருவக அணி
 2. “மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்‌” – இதில்‌ வந்த நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ 
தகுதி
 3. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌
 அறம்‌ செய விரும்பு
 4. பன்மை விகுதி பெற்று வராத சொல்‌
 மணல்‌
 5. தோன்றல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌
 பூங்கொடி
 6. “தந்தையுடன்‌ மைந்தன்‌ வந்தான்‌” என்பதில்‌ உள்ள –  ‘உடன்‌’
 4ம்‌ வேற்றுமை
 7. உயர்திணை…

Read More
Translate »