தொல்காப்பியம் என்றால் என்ன?

தொல்காப்பியம்

     தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர்.


பெயரும் வரலாறும்

    தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப் பெயராயிற்று என மற்றொரு சாராரும் மொழிவர் “தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று பாயிர் ஆசிரியர் பனம்பாரனார் கூறியமையால் ஆசிரியரின் இயற்பெயரே அஃது என்றும், தோற்றி என்பதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டது. என்பாராய் நூலின் பெயரே நூலாசிரியர்க்கு ஆயிற்று என்றும் வெவ்வேறு நோக்கில் விளக்கம் காண்பர் நூலாசிரியர் பெயர்க்கு முன்னுரிமை தருவோர் காப்பியக்குடியில் பிறந்தமையால் தொல்காப்பியன் எனப்பட்டார் எனக் காரணம் கூறுவர். இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் வரும் ‘காப்பியத் தொல்குடி” என்னும் தொகையைச் சுட்டுவா். வடநாட்டில் விருத்தக்காப்பியக்குடி’ என்ற குடி உண்டு என்றும். அதன் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம் என்றும் கருதுவோர் உளர். தமிழகத்துள் சிறந்தோரை வடபுலத்தாராக்கிக் காட்டுவதில் முனைப்புடைய இலர்.


       தம் கூற்றிற்கு அரணாக நச்சினார்க்கினியர் கூறும் கதை அமைந்துள்ளது. அவர் சமதக்கினியின் மகனான திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என்றும், அகத்தியர் தென்னாடு வரும்போது பதினெண் வேளிரோடு தம் மாணவராகிய திரண துமாக்கினியாரையும் அழைத்து வந்தார் என்றும் குறிப்பிடுவார். சமதக்கினியின் மக்கள் பரசுராமன் முதலிய நால்வர் என்றும், அவருள் யார்க்கும் திரணதூமாக்கினி என்ற பெயா இல்லை என்றும் இராமாயணக் கதையால் அறிகிறோம். தொல்காப்பியர் வட நாட்டினின்றும் வந்தவர் என்பதை இரா இராகவஜயங்கார் மு இராகவ ஐயங்கார், & வெள்ளைவாரணர் போன்றோர் தக்க காரணங்களோடு மறுத்துள்ளனர். தொன்மையான இலக்கணக் கருத்துக்களைக் காப்பதால் தொல்காப்பியம் என நூலுக்குப் பெயர் வந்தது எனவும், அதுவே நூலாசிரியர்க்கும் பெயராய் அமைந்தது என்றும் கூறுதல் பொருத்தமாக உள்ளது. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்ற கருத்தும் பிற்கால இலக்கணப் பாயிரங்களில் காணப்படுகிறது.


”……………………………………மலையத் திருந்த

இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த

புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய

தொல்காப்பியன்”நம்பியகப் பொருட்பாயிரம்.

    தொல்காப்பியா முதலிய அகத்தியர் மாணவர் பன்னிருவரும் சேர்ந்து பன்னிருப்படலம் இயற்றினர் என்பதைத்


”துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன் முதற்

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த

பன்னிரு படலம்“

      எனப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் பகரும் தொல்காப்பியரை அகத்தியரின் மாணவராய் ஏற்றுக் கொள்ளாதவர் உளர் என்னும் பேராசிரியர் உரையாலும் தொல்காப்பியர் பன்னிருபடலம் இயற்றுவதில் பங்கு கொள்ளவில்லை எனும் இளம்பூரணர் உரையாலும் அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் நேரடித் தொடர்பு இல்லை என உணரமுடிகிறது. அகத்தியர் பற்றிய குறிப்பு ஒன்று கூடத் தொல்காப்பியத்தில் இல்லாமையும் அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் எனச் சங்கம் மற்றும் சங்க மருவிய கால இலக்கியங்கள் எவையும் மொழியாமையும் மேற்கூறிய செய்திகளனைத்தும் கற்பனையானவை என்பதைப் புலனாக்கும்.


      தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார் எனப் பாயிரக்குறிப்புக் கூறுவதால் அவ்விருவரும் சமகாலத்தவர் என்பதும். உடன் பயின்றவர் என்பதும் பெறப்படும் இச்செய்தியைப் பின்னையோர் பெரிதும் புனைந்துரைத்துப் புராணக் கதைபோல் ஆக்கி விட்டனர் என்பதே உண்மை
காப்பியாற்றுக் காப்பியன் வெள்ளூர்க் காப்பியன் காப்பியஞ் சேந்தன். காப்பியன் ஆதித்தன், பல்காப்பியன் போன்ற பழைய பெயர்கள். காப்பியன் என்பது இயற்பெயராதலைப் புலப்படுத்தும். முன்தோன்றிய தொல்காப்பியன் என்ற பெயரைப் பின் வந்தோர் சூட்டிக் கொண்டனர். என்றும் கூறலாம்
வடவெழுத்துத் தமிழில் கலப்பதை மறுப்பதும், வண்புகழ் மூவர். என்றும் “போந்தை வேம்பே ஆரௌ வரூஉம் மாபெருந் தானையா” என்றும் தமிழ் மூவேந்தர்களைச் சிறப்பித்துரைப்பதும் தொல்காப்பியர் தமிழரே என்பதற்குச் சான்று பகர்வன ஆகும்.


     ‘காலம்’ – தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிரம்ப உள்ளன,

கி.பி. 5ஆம் நூற்றாண்டு                   – வையாபுரிப்பிள்ளை


கி.பி 4ஆம் நூற்றாண்டு                   – கே.என் சிவராசப்பிள்ளை


கி.மு 2ஆம் நூற்றாண்டு முன்         – ரா இராகவையங்கார்


கி.மு 3ஆம் நூற்றாண்டு முன்         – மு வரதராசனார். சேஷா அய்யங்கார்


கிமு 5ஆம்நூற்றாண்டு முன்           – மது ச. விமலானந்தம், சி.பாலசுப்பிரமணியன்

கி.மு. 7ஆம் நூற்றாண்டு முன்       – சி இலக்குவனார். கா.சு. பிள்ளை


கி.மு. 10ஆம் நூற்றாண்டு முன்      – நாவலர் சோமசுந்தர பாரதியார்


வியாசர் வேதத்தைப் பகுக்கும் முன் – உ.வே. சாமிநாதையர்


வேதகாலத்திற்கு முன் (கி.மு. 2387 இல்) – மறைமலைஅடிகள்


கி.மு. 5320                                           – க. வெள்ளைவாரணர்.


     சங்க இலக்கியங்களிலும், பின்னைய இலக்கியங்களிலும் காணப்படாத இலக்கண விதிகளும், சொல்லமைப்புக்களும் தொல்காப்பியத்தில் காணப்படுவதால், சங்க இலக்கியத்திற்கு முற்பட்டது தொல்காப்பியம் என்பது வெளிப்படை.
ஆகையால் வையாபுரிப்பிள்ளையும் சிவராசப் பிள்ளையும் கூறும் காலங்கள் பொருத்தமற்றவையாகும். சங்ககால இலக் கியங்கட்கும் தொல்காப்பியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் வருமாறு.


1.பரிபாட்டு காமம் பொருளாக வரும் என்ற தொல்காப்பிய விதிக்கு மாறாகப் பரிபாடலில் 15 கடவுள் வாழ்த்துப் பாடல்கள் (புறப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


2.தொல்காப்பியர் எழுத்தெண்ணிப் பாடப்படும் கட்டளை அடிகளுக்கு முதன்மைதரச் சங்க இலக்கியங்களோ சீர்வகை அடிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.


3.அகப்பொருள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் பாடப்பெறும் என்ற தொல்காப்பிய விதிக்கு எதிரிடையாக அகவலில் அமைந்த அகப்பாடல்கள் சங்க இலக்கியங்களில் விஞ்சி நிற்கின்றன.


4.தொல்காப்பியர் குறிப்பிடும் நேர்பு நிரைபு அசைகளைப் பிற்காலக் காக்கைபாடினியாரோ அவினயனாரோ ஏற்று மொழியவில்லை. சங்க இலக்கியப் பாடல்களிலும் நேர்பு நிரைபு அசைகள் போதுமான சிறப்பிடம் பெறவில்லை.


5. பாட்டு, உரை, நூல், வாய்மொழி பிசி, அங்கதம். முதுசொல் எனத் தொல் காப்பியர் குறிப்பிடும் எழுவகை யாப்புக்களுள் பாட்டு யாப்பு மட்டுமே சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பிற யாப்புக்கள் வழக்கிறந்தன போலும், அந்த அளவிற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை விட மிகவும் பழமையானது.


6 தொல்காப்பியர் பாட்டி என்ற சொல் பெண் நாயைக் குறிக்கும் மரபு சொல் என்றார். சங்க இலக்கியமான பரிபாடலில் (10) மட நடைப் பாட்டி என அச்சொல் பாடினியைக் குறிப்பதாக வருகிறது அது பிற்காலத்தே பெற்றோரின் தாயாரைக் குறிக்கும்.


7. உரையாசிரியர்கள், தொல்காப்பியர் கூறும் பல விதிகளுக்குச் சங்க இலக்கியங்களிலும் எடுத்துக்காட்டுக் காட்ட முடியாமல். “இலக்கணம் உண்ளமயால் இலக்கியம் அவர் காலத்திருந்தது. இப்பொழுது வழக்கிறந்தது’ எனும் பொருளில் குறிப்பிடுவர் இது சங்க இலக்கியத்தை விட மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் என்பதைக் காட்டும்.


8.கள் விகுதி தொல்காப்பியத்தின் படி அஃறிணைப் பன்மைக்குரியது. திருக்குறளில் பூரியர்கள். மற்றையவர்கள் என்றும், கலித்தொகையில் ஐவர்கள் என்றும் உயர்திணைப் பன்மையில் கள் விகுதி வருகிறது.


9.அன்ஈறு படர்க்கை ஆண்பாலுக்குரியது எனத் தொல்காப்பியம் சொல்லும்

10 சங்கப் பாடல்களில் இரப்பன் உடையன். இழந்தனன் எனத் தன்மை ஒருமையிலும் அன் விகுதி வந்துள்ளது.


10. ஆல் ஏல், மல், மை பாக்கு ஆகிய விகுதிகளையுடைய வினை எச்சங்கள் தொல்காப்பியரால் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் அவை வருகின்றன.


11. தொல்காப்பியத்தில் வினையீறாகச் சுட்டப்பட்ட ‘மார்’ தோழி மார் எனப் பெயர் ஈறாகவும் சங்கப்பாக்களில் வந்துள்ளது.


12. முன்னிலை, தன்மைகளில் வாராது எனப்பட்ட வியங்கோள் வினை முற்று, அவ்விடங்களில் வருதலைச் சங்கப் பாக்களில் காணமுடியும்.


13. கோடி என்ற எண்ணுப் பெயரைத் தொல்காப்பியர் கூறவில்லை ஆனால் சங்க இலக்கியங்களில் அது பல இடங்களில் உள்ளது மேலும் தொல் காப்பியர் குறிப்பிடும் அதோளி இதோளி என்னும் சுட்டுப் பெயர்கள். சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை.


14. மொழி முதலில் ‘ச’ வாராது எனத் தொல்காப்பியம் நுவலச் சமழ்த்தவ், சாட்டு என மொழி முதல் சகரம் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.


15.குமலி ஞிமிறு ஞேயம் யவனர், யூகம் யூபம் போன்ற சங்க இலக்கியச் சொற்கள் தொல்காப்பியம் குறிப்பிடாத மொழி முதல் எழுத்துக்களைப் பெற்றுள்ளன.


இவற்றால் தொல்காப்பியத்திற்குப் பின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள்: சங்க இலக்கியம் பிற்பட்டது என்பது புலனாம். ‘
ஐந்திரம்’ நிறைந்த என்ற பாயிரத்தொடர் வடமொழி இலக்கண வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல், முந்தைய இந்திர வியா கரணத்தைக் குறிப்பதால், பாணினிக்கும். கி.மு 4 ஆம் நூற்றாண்டு) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பர் இன்னும் பாரத, இராமாயணம் பற்றிய குறிப்புக்கள் புறத்திணைப் பகுதிகளில் இடம்பெறாமையாலும் தொன்மக் (புராணம்) கூறுகள் எவையும் காணப்படாமையாலும், இதிகாச காலத்திற்கு முற்பட்டது தொல்காப்பியம் எனல் தகும். வால்மீகி தொல்காப்பியம் அரங்கேறிய இரண்டாம் சங்கத்துக் கபாடபுரம் பற்றிக் கூறுதலால் இராமாயண காலத்திலோ, அதற்கு முன்போ தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம் வட எழுத்துப் பற்றிக் கூறுவதால் ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்து பரவிய காலத்திவேயே தொல்காப்பியம் ஆக்கப்பட்டது எனலாம்.
வேதத்திற்குப் பிற்பட்ட வடநாட்டு நூல்களும் இதிகாசக் கதை நிகழ்வுகளும் காட்டப்படாமையால், தொல்காப்பியர் காலமும் வேத காலமும் ஒன்றே ஆகும். எனவே தொல்காப்பியர் காலம் இன்றைக்கு 3500 ஆண்டுகட்கு முற்பட்டது எனக் கொள்ளல் வேண்டும்.


சமயம்

      சமய வேறுபாடுகள் பற்றிய செய்திகளோ, சமண புத்த சமயக் குறிப்புக்களோ தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. ஏனெனில் சமண, புத்த மதங்கள் தோன்றுவதற்கு முன் ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தொல்காப்பியம் தோன்றிவிட்டது இருப்பினும் சிலர் படிமையோன் என்ற பாயிரச் சொல்லைக் கொண்டும் உயிர்களைப் பகுத்துக் கூறியு திறங்கண்டும் தொலகாப்பியரைச் சமணராக்க முயல்வர். போற்றாத காமத்தைப் புரை தீர்காமம் எனச் சுட்டிய தொல்காப்பியரைச் சமணர் என ஏற்க முடியாது. படிமையோன் என்பது தன்மையன் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்லே பிறர் கூறுமாறு பரதிமா என்பதற்கும் படிமை என்பதற்கும் தொடர்பில்லை. உயிர்களைத் தொல்காப்பியர் ஆறாக பகுக்கச் சமணர் ஐந்தாகப் பகுப்பர் சமணர் பகுப்பு தொல்காப்பியரைப் பின்பற்றி அமைந்திருக்கலாம். சமணர் பகுப்பையே சமணரான நன்னுலாரும் கொள்வார்.
சைவம் என்ற சொல் மணிமேகலையில்தான் முதலில் வருகிறது. ஆகையால் நிறுவன அமைப்புச் சாராத – இயற்கையோடிணைந்த நிலத்தெய்வங்களை அல்லது பொதுவானதொரு கடவுளை ஏற்பவ ராகத் தொல்காப்பியர் இருந்திருக்கலாம். கடவுள் வழிபடு தெய்லம் நிலத்தெய்வங்கள் போன்றவை அவரால் குறிப்பிடப்படும் தெய்வங்கள். எனவே சமயம், முறையாக அரும்பாத காலம் தொல் காப்பியர் காலம் எனல் பொருந்தும்.


முன்னூல்

    முந்துநூல் என்ற பாயிரத் தொகைச் சொல், அகத்தியமாகிய முன்னூலைக் குறிக்கும் என்பர், “முந்துநூல் அகத்தியமும், மாபுராணமும். பூதபுராணமும் இசைநுணுக்கமும்’ என்பார். நச்சினார்க்கினியர் அகத்தியத்தைத் தொல்காப்பியர் கற்றிருந்தார் என்பதை,


”ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்

பொருந்தக் சுற்றுப் புரைதப உணர்ந்தோர்

நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்…”

       என்று பன்னிருபடலப் பாயிரம் குறிப்பிடும். தொல்காப்பிய உரைகளும் இதளை ஏற்கும். எனினும் சங்க இலக்கியத்திலோ, தொல்காப்பியத்திலோ இதற்குச் சான்றில்லை தொல்காப்பியரின் புகழைக் குறைக்க அகத்தியர் புதிதாக உருவாக்கப்பட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது.
என்மனார் புலவர், மொழிப, யாப்பறிபுலவர் நூல் நவில் புலவர். பாடல் சான்ற புலனெறி வழக்கம், தொன்மொழிப் புலவர் என்று 230க்கும் மேற்பட்ட இடங்களில் தமக்கு முன்பிருந்த புலவர்களைச் சுட்டுவார் தொல்காப்பியர்.
ஐந்திரம் என்பது இந்திர வியாகரணமா வேறொன்றா என்பது தெரியவில்லை எனவே புரியாத நிலையில் இந்திர வியாகரண மாகிய வடநூலைத் தொல்காப்பியர் சுற்றிருந்தார் எனற்கில்லை.


நூலமைப்பும் நுவல்பொருளும்

      தொல்காப்பியம் ஆசிரியப்பா அடிகளால் ஆனது. ஆங்காங்கே தெளிவு கருதி உரைநடை அடிகளாகிய சொற்சீரடிகளையும் பெற்று நடக்கிறது.


அ இ உ அம்மூன்றும் சுட்டு

எழுத்தெனப் படுப

      தொல்காப்பியத்திலுள்ள மொத்த நூற்பாக்கள் 1610. உரையாசிரியர்கள், தத்தம் கருத்திற்கேற்ப 1595 முதல் 1611 வரையிலான நூற்பாக்களாகக் கொள்வர். தொல்காப்பியத்திலுள்ள அடிகள் 3999 என்றும், சொல் வடிவங்கள் 5930 என்றும் வ.சுப. மாணிக்கம் தொல்காப்பியக்கடல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் மூன்றுபெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை எழுத்ததிகாரம் சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பவை நூல் உறுப்பைப் படலம் என்றும் மூன்றுறுப்படக்கிய பிண்டம் நூல் என்றும் தொல்காப்பியச் செய்யுளியல் குறிப்பிடுவதால் எழுத்துப் படலம் சொற்படலம் பொருட்படலம் என்பனவே முற்காலத்தில் தொல் காப்பிய உறுப்புக்களின் பெயர்களாக இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்கள் பெறும் ஆகையால் தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் தொகை 27.


        எழுத்ததிகாரத்தின் நூற்பாக்கள் 483, இயல்கள் 9. அவை நூன்மரபு, மொழி மரபு பிறப்பியல் புணரியல் தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல் புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எழுத் ததிகாரத்தில் முதல்மூன்று இயல்கள், எழுத்துக்களின் வகையும் தொகையும் மொழி முதல் இடை கடை எழுத்துக்கள், எழுத்துக்களின் பிறப்பு ஆகியவற்றை விளக்குகின்றன பின் ஆறு இயல்களில் புணர்ச்சி இலக்கணம் மிக விரிவாக மொழியப்படுகிறது.


    சொல்லதிகாரத்தின் நூற்பாக்கள் 463: இயல்கள் 9, அவை, கிளவியாக்கம். வேற்றுமையியல் வேற்றுமை மயங்கியல், விளி மரபு பெயரியல். வினையியல் இடையியல், உரியியல் எச்சவியல் சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம் என்ற முதலியல் முதன்மைத் தொடர் எழுவாய்த் தொடர்ட் பெயர்த் தொடர் (N. PI. வினைத்தொடர் (V.P எதிர்மறைத் தொடர் செப்புத் தொடர் (Affirmative) வினாத் தொடர் (Interrogative) என எழுவாய்த் தொடர்களையும் உட்கிளவிகளையும் (Phrase) அவை அமையுமாற்றையும் விளக்கும் அடுத்த மூன்று இயல்கள் எழுவாய் வேற்றுமையல்லாத பிற வேற்றுமைத் தொடர்களை விரித்துரைக்கும். பெயரியல் வினையியல் என்பள சொல்வகைகளையும் இடையியல் உரியியல் ஆகியவை சொல் லாக்க உறுப்புகளையும் எச்சலியல் சொல்லிணைவின் ஆற்றலால் தொடர் களில் தோன்றும் மறைபொருள்களையும் உணர்த்தும் உரியியலில் அடிச் சொற்களின் பொருள்களைப் பட்டியலிட்டு உணர்த்துதல் குறிப்பிடத்தக்கது.


        பொருளதிகாரத்தின் நூற்பாக்கள் 665. இயல்கள் 9. அவை அகத் திணையியல் புறத்திணையியல், களவியல் கற்பியல் பொருளியல்  மெய்ப்பாட்டியல், உலமவியல், செய்யுளியல், மரபியல் பொருளதிகாரத்தில் முதல் ஐந்து இயல்கள் அகமும் புறமும் ஆகிய பொருளிலக்கணங்களையும் பாவின் நுலல்பொருள் இலக்கணம்), மெய்ப்பாட்டியல் செய்யுளில் காணப்படும் உணர்ச்சி வகைகளையும், உவமவியல் சுற்பனையின் வெளிப்பாடுகளாகிய ஒப்பீடுகளையும், செய்யுளியல் தனிப்பா வடிவம், இலக்கிய வகைமை வடிவம் ஆகிய இருவகை வடிவங்களையும் மரபியல் நூலிலும் இருவகை வழக்கிலும் கடைப்பிடிக்கப்படும் மரபுகளையும் விளக்கி நிற்கும் மரபியலில், ‘நூலே கரகம்’ எனத் தொடங்கும் நூற்பா. முதலாகப் பதினைந்து நூற்பாக்கள் மிகவும் பிற்பட்ட கால வழக்குகளையும் கருத்துக்களையும் கொண்டிருப்பதால் அவற்றை இடைச் செருகல் என்பர்.


       மந்திரம், பி.சி. அங்கதம், பழமொழி. பண்ணத்தி குறிப்பு மொழி போன்ற பல்வேறு இலக்கியங்களையும் பகுத்து மொழிந்துள்ளார். மேலும் 20 வண்ணங்கள் எட்டு வகைப்பட்ட வனப்புக்களாகிய இலக்கிய வகைகள் நால்வகை உரைநடைகள் எனப் பலவற்றையும் பகுத்தாய்ந்ததின் நுட்பம். போற்றற்குரியது.


சிறப்பும் சீர்மையும்

1.தொல்காப்பியம் கிடைக்கும் தமிழ் நூல்களில் முதல் நூல். வேத காலத்தது என்று குறிப்பிடும் அளவிற்கு மிகப் பழமையானது. வடமொழிப் பாணினிக்கும் முற்பட்டது; அதனால் பாணினிக்கும் வழிகாட்டியாய் அமைந்தது. உலகமொழி இலக்கணங்களின் முன்னோடி யாகப் பாணினியை மேளாட்டார் குறிப்பிடுவது தவறு தொல்காப்பியமே உலகமொழி இலக்கணங்கள் அனைத்திற்கும் முன்னோடி அது தமிழின் உயிர் நாடி.


2.ஒலிகளின் பிறப்பு, வகைமை சொற்களில் அவை நிற்கும் இடம் ஆகியவை பற்றிய தொல்காப்பியரின் விளக்கங்கள். உலக மொழிகளின் ஒலிகளை ஆயும் ஒலியியலாரை வியப்பில் ஆழ்த்துவன; அவர்களால் பெரிதும் பாராட்டப்படுவன.
 

“எழுத்ததிகாரப் பிறப்பியல் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது மட்டு மின்றிப் பிறமொழி ஒலிகளையும் எழுதிக் காட்டும் ஏற்றம் சான்றது. வே மாணிக்க நாயக்கர்


“இலக்கண உலகின் ஏகச் சக்கரவர்த்தி என்று கூறப்படும் பாணினி என்ற வடமொழி ஆசிரியரும், இவ்வளவு விரிவாக (ஒலியை) ஆராய்ந்த திலலை” – எஸ் வையாபுரிப்பிள்ளை


3.வேதங்கள் எழுதாக்கிளவி எனப்பட்டன. வடமொழி இதிகாசங்கள் வாய்மொழியாக வழங்கப்பட்டன. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தான் வடமொழி எழுத்துக்கள் வரிவடிவம் பெற்று வடமொழி இலக்கண இலக்கியங்கள் ஏட்டில் ஏறின வேத காலத்தது எனக் கருதப்படும் பழமை வாய்ந்த (சி.மு 1500) தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. உலகில் வரிவடிவம் கூறும் ஒரே பழைய இலக்கணம், தொல்காப்பியமே.


4.உலக மொழிகளின் மாபிலக்கணங்கள் பேச்சு மொழியைப் புறக் கணிக்கும். மொழியியலாரோ பேச்சு மொழிக்கு முன்னுரிமை தருவர். தொல்காப்பியம் பேச்சுமொழி, இலக்கியமொழி ஆகிய இரு வகை வழக்கிளையும் ஆராய்ந்து கூறும். பேச்சுமொழிகளையும், வட்டார வழக்குகளையும் (திசைச்சொல் ஆராய்ந்து இலக்கணம் வகுக்கும் முறைமையை முதன்முதலில் கையாண்ட தொல்காப்பியர் இவ்வகையில் இன்றைய மொழியியலார்க்கும் வழிகாட்டி ஆவார்.


5.தொல்காப்பியர் உலகப்பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பாற்பாகுபாடு செய்தமை, அறிவியற் கண்ணோட்ட முடையது. உலகின், பிறமொழியாளர் அறியாதது. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையே ஏற்படும் குழப்பத்தைப் போக்கியது. அதனால் தமிழ்த் தொடர்கள் தெளிவும் விளக்கமும் பெறுகின்றன.


6.வெளிப்பட நின்று பொருளுணர்த்தும் தொடரமைப்புக்கள் மறைந்து நின்ற சொற்களால் பொருள் உணர்ந்தற்கேதுவாகிய எச்சவகைகள், கூட்டுச் சொற்களாகிய தொகைச்சொற்கள் (Compound words) பெயரும் வினையுமாகிய சொற்களின் பல்வேறு வகைகள். வேற்றுமைத் தொடர்கள், உரியாலும் இடையாலும் ஏற்படும் சொல்லாக்கங்கள் எனப் பலவாகிய மொழி நுட்பக் கருத்துக்களைத் தொல்காப்பியம் விளக்கி அமைகிறது. இன்றைய மொழியியல் அறிஞரும் போற்றும் நுண்மைகள் பல தொல்காப்பியத்தில் ஒளிர்கின்றன.


7.பிற்காலத்தில் தோன்றிய நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற மொழி இலக்கணங்கட்கும். இறையனார் களவியல் நம்பியகப் பொருள். புறப்பொருள் வெண்பாமாலை முதலிய பொருள் இலக்கணங்கட்கும், தண்டியலங்காரம். மாறனலங்காரம் போன்ற அணியிலக்கணங்கட்கும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை: யாப்பதிகாரம் முதலிய யாப்பிலக்கண நூல்கட்கும். இலக்கிய வகைமைகளை வரையறுக்கும் பாட்டியல் நூல்களுக்கும் தொல்காப்பியமே வழிகாட்டி இலக்கணத் துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் புதுப்புது இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன் தொல்காப்பியம் பெரிதும் உதவிற்று. ஆற்றுப்படைப் பாடல்கள். மடல் இலக்கியங்கள். கோவை இலக்கியங்கள், பிள்ளைத்தமிழ் காதல் இலக்கியங்கள். தூது இலக் கியங்கள் களவழி நாற்பது தேரோர் களவழி பள்ளு (ஏரோர் களவழி முதலான பல இலக்கியங்கள் தொல்காப்பிய அகப்புறத் துறைகளின் தாக்கத்தால் அரும்பின. இக்கால இலக்கியங்களிலும் தொல்காப்பியக் கருத்துக்களும் வழி காட்டு நெறிகளும் ஊடுருவியுள்ளன. காலந்தோறும் தோன்றுகிற எல்லாவகை இலக்கண இலக்கியங்களும் தொல்காப்பிய ஆகாயை அடியொற்றித்தான் நடக்கும். இக்கருத்தில்,


“கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்

தோமின் நுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையில் தமிழறிந் தோற்குக் கடனே“

எனப் பல்காப்பியளார் பாராட்டுவார்.


8.வாழ்க்கை முறை தொழில் மக்களின் பண்புநலன்கள் பண்பாடு நாகரிகம் பொருள்வளம், சமூகநிலை கடவுட்கொள்கை மரபு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கூறுவதால் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வரலாற்று நூலாகவும், நிலப்பாகுபாடு தமிழ் நாட்டெல்லை. மூவேந்தர்கள். போர்முறை ஆட்சிமுறை முதலிய வறறைக் குறிப்பிட லால் அரசியல் வரலாற்று நூலாகவும், தன்கால இலக்கண இலக்கியக் கருத்துக்களை வகுத்துரைப்பதோடு முன்னிலவிய இலக்கண இலக்கியக் கருத்துக்கலளயும் குறிப்பிட்டுச் சுட்டலால் இலக்கிய – இலக்கண வரலாற்று நூலாகவும் தொல்காப்பியம் விளங்குகிறது. தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் முதன்மை நாகரிக முன்னோடி நூல் தொல்காப்பியம்.


9.உலகின் பிறமொழி இலக்கணம் எதுவும் பொருளாராய்ச்சியை மேது கொண்டதில்லை. மொழி இலக்கணத்திற்கு நிகராகப் பொருளிலக் கணம் கூறும் உலகின் ஒரே இலக்கணம் தொல்காப்பியம். இக்கால ஆய்வாளர்கள் பொருளதிகாரத்தை நுவல்பொருள் இலக்கணம் என்றும் பானியற் கோட்டாடு என்றும் இலக்கியக் கொள்கை என்றும் இயம்புவர்.


10. தொல்காப்பியம் மொழியிலக்கணம் மட்டும் மொழியாமல் பொருண்மை இலக்கணமும் (Semantics)  பேசுகிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதோடு உரியியலில் சொற்பொருள் விளக் கமும் உரைக்கிறார் சொல்லின் பொருள் மரபு வழியே வருவது எனவே “மரபுநிலை திரியிள் பிறிது பிறிதாகும்” என்பார். தொல்காப்பியர்


கடிசொல் இல்லை காலத்துப் படினே

      என்று கூறிப் புதிய புதிய சொற்கள் தோன்றுதலையும் தொல்காப்பியர் வரவேற்கிறார்.


11.பிற்கால நிகண்டுகள் தோன்றத் தொல்காப்பிய உரியியலே வழி காட்டி, அகராதியின் முன்னோடி அது.


12. உலகில் முதன்முதலில் மொழிபெயர்ப்புப் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் தொல்காப்பியம் ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழியின் ஒவி வரிவடிவத்திற்குக் கொண்டு செல்லும் உத்தியினைத் (Translitaration) தொல்காப்பியர், வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. என்ற நூற்பாவில் குறிப்பிடுவார் சொல்லுக்குச்சொல் பொருள் பெயர்த்தலை மொழி பெயர்த்தல் என்றும் விளங்கும் வகையில் கருத்துப் பெயர்த்தலை அதற்படயாத்தல் என்றும் வகைப்படுத்திக் கூறியுள்ள திறம் பெரிதும் போற்றத்தக்கது.


13. அகப்பொருள் மாந்தரின் பெயர் கூறக்கூடாது என்ற தொல்காப்பியரின் விதி இலக்கிய உணர்வுகளைச் சமுதாயத்திற்குப் பொதுவாக்கமுனையும். இக்காலத்தில் நடப்புச் செய்திகளையோ, புனைவுகளையோ கதையாகக் கூறுங்கால் கற்பளையாகப் பெயர்களைப் படைத்து மொழிவதும் அக்காலத்து அசுமாந்தர் குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாததும் இலக்கியம் ஒருவருக்காகவன்றி எல்லோருக்கும் பொதுவாக உரியது” என்பதில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன.


14.உணர்வுகளைப் பொதுலான மெய்ப்பாடுகள் அகப்பொருட்கு மட்டுமே உரிய மெய்ப்பாடுகள் என வேறுபடுத்தி விளக்கி இருக்கும் திறம், இன்றைய உளவியலாளரையும் திகைப்புறச் செய்யும் உளவியல் மட்டுமின்றி உயிர்களின் வகைப்பாடு, ஓரறிவுயிர்களைப் புல்வகை, மரவகை எனப் பகுத்து விளக்கியமை போன்றன, அறிவியற்றுறைக்குச் சவால்களாக அமைவன.


15. “பாணினியின் தெளிவும் பதஞ்சலியின் திட்பமும் அரித்தாட்டிலின் தெளிவும். அவையனைத்திலும் இல்லா வளமும் வளப்பும் அளவை நூன் முறையமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும். நிரம்பியமைந்தது தொல்காப்பியம்” நாவலர் சோமசுந்தர பாரதியார்.


16.இன்றைய அறிஞர்கள் இலக்கணத்தினை வண்ணனை முறையியல் (Descriptive) வரைவியல் (Perscriptive) வரலாற்றியல் (Histo-rical ஒப்பியல் (Comparative) எனப் பலவாறு பகுத்துரைப்பர் அப்பகுப்புத் திறங்கள் அனைத்தும் ஆங்காங்கே பொதுளி நிற்பத் தொல்காப்பியா தம் நூலினை அமைத்துள்ள அருமைப்பாடு பெருமைப்பட வைக்கிறது.


17. இலக்கணமாக மொழி நூலாக ஆராய்ச்சிக் கருவி நூலாக அமைந்த தொல்காப்பியம், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர். நச்சினார்க்கிளியர், தெய்வச்சிலையார். கல்லாடனார் போன்ற பழம் பெரும் புலவர்களின் உரைகளைப் பெறும் மேன்மைமிக்கது. தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதற்குத்திர விருத்தி போன்ற விளக்கவுரைகள் மட்டுமின்றிச் சோமசுந்தரபாரதியார். அரசஞ்சண்முகனார் போன்றோரின் ஆய்வுரை கட்கும் அரங்கமாகியது பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார், மு இராக வையங்கார். வெள்ளை வாரணனார், இலக்குவனார்.வ. சுப. மாணிக்கனார் முதலிய பலரும் தொல்காப்பியக் கடலுள் முழுகி ஆய்ந்து முத்தெடுத்துள் ளனர். தொடர்ந்து ஆய்வுக்களமாக இருந்து வருவதோடு காலந்தோறும். புதுப்புதுக் கருத்துக்களைத் தோண்டி எடுக்கும் சுரங்கமாகப் – பிரதியாகப் புதுமைப் பொலிவோடு பூத்துக் குலுங்கிய வண்ணம் உள்ளது.


       தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் சி.வை தாமோதரம்பிள்ளை (1892) முடிவாக, நாவலர் சோமசுந்தர பாரதியார் தரும் புகழுரையினை முத்தாய்ப்பாகக் கொள்ளலாம். “குறையியலா நிறைவு அறிவு சால் செறிவு நிரம்புவளம். வரம் பிறவாமல் வரையறுத்து வடித்த முறைவனப்பு, மொழி வளர்ச்சிக்கு என்றும் தளர்ச்சிதராக் கட்டமைப்புகளால் ஒப்புயர்வற்ற சிறப்பு வாய்ந்த இலக்கணநூல் தமிழில் மட்டுமன்று: உலகில் நிலவும் பல மொழிகளில் பாராட்டப்பெறும் எல்லா இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும். எழிலும், பயனும், பண்பும் வாய்ந்தது. வேறெந்தமொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும். அழகும் அருமையும் அமைந்தது.


தொல்காப்பியம் – தொல்காப்பியர் பற்றிய மேற்கண்ட செய்திகள் அனைத்தும் தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன.

Leave a Reply

Translate »